தலைமை அறிவிப்பதற்கு முன் கடலூரில் போட்டி என பேஸ்புக்கில் அறிவிப்பு.. குமரவேலின் விலகலை ஏற்ற மநீம!
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுவதாக சி.கே.குமரவேல் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மக்கள் செல்வாக்கு கொண்டவர் குமரவேல். இவர் மக்கள் நீதி மய்யத்தின் கடலூர்- நாகை பொறுப்பாளராக இருந்தார்.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் நடத்தி வந்த வேட்பாளர் நேர்காணலில் தேர்வு குழுவுடன் பங்கேற்றிருந்தார். அப்போது அண்மையில் கட்சியில் இணைந்த கோவை சரளாவுடனும் மநீம துணை தலைவர் டாக்டர் மகேந்திரனுடனும் குமரவேலுக்கு நேற்று கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

மக்கள் நீதி மய்யம்
இதையடுத்து குமரவேல் விலகல் கடிதத்தை கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாக தெரிகிறது. குமரவேலின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

நேர்காணல்
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

பேஸ்புக்கில் வெளியீடு
அந்த நேர்காணல் முடிவு பெறாத வேளையில் சி.கே. குமரவேல் சமூகவலைதளங்களில் குறிப்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளார்.

முரணானது
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிக்காது. ஜனநாயக முறைப்படி, வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இன்னும் பல நூறு மனுதாரர்கள் தங்களின் நேர்காணலுக்காக காத்திருக்கும் சூழலில் நேர்காணலுக்குக் கூட வராமல் தான் தேர்தலில் போட்டியிடுவதாக குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்.

ஏற்பு
இதுகுறித்து குமரவேலிடம் விளக்கம் கேட்டும் அவர் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இல்லை. தலைமை அறிவிப்பதற்கு முன்னரே தன்னைத்தானே வேட்பாளராக வெளிப்படுத்திக் கொள்வது கட்சிக் கட்டுப்பாட்டிற்கு முரணாண ஒரு செயல் என்பதே கட்சியின் நிலைப்பாடு. இதனால் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications