Chennai Trichy highway: சென்னை திருச்சி ஹைவேயில் ஆம்னி பஸ் - கார் மோதி பயங்கரம்.. கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
கடலூர்: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (Chennai Trichy highway) கடலூர் திட்டக்குடி அருகே ஆம்னி பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த கல்லூர் மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில், மேல்மருவத்தூரில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கார் மற்றும் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

ஆம்னி பஸ் மீது மோதி விபத்து
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 6 பேர் காரில் வந்துகொண்டிருந்தனர். திட்டக்குடி அருகே உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் பயின்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய கார் திடீரென சாலையில் தடுப்பின் மீது ஏறி மறுபக்கம் சென்றது.
3 பேர் உயிரிழப்பு
இதில் அந்த சாலையில் மேல்மருவத்தூரில் இருந்து பெரம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது கார் மோதியது. கார் - ஆம்னி பஸ் மோதிய விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.
இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications