என்எல்சி கையகப்படுத்திய நிலத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி! ராட்சத குழாய்களும் இன்றே பதிப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: என்எல்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிக்காக கான்கிரீட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2ஆவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது.

 cuddalore NLC expansion canal excavating work started today

இந்த நிலையில் இந்த இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை என்றும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு, கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை, இந்த நிலையில் அரசியல் கட்சியினர் அவ்வப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று முன் தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்எல்சி நிர்வாகம், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணிக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட ராட்சத ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் அணை போடும் பணி நடந்தது.

இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு அதில் அணைகள் போடப்பட்டன. இதையடுத்து அங்கு விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்பி ராஜாராமன் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட்டன.

இந்த விவகாரம் அறிந்து பாமகவினர் நேற்று சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இன்றைய தினம் என்எல்சியால் அழிக்கப்பட்ட நிலங்கள் வட்டாட்சியர் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

அதே நேரத்தில் என்எல்சி கையகப்படுத்திய நிலத்தில் கால்வாய்க்காக கான்கிரீட் அமைப்புகள் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக மேலும் 10 ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 40 ஜேசிபி இயந்திரங்களின் துணையுடன் இந்த பணிகள் நடைபெறுகிறது. இன்னும் சற்று நேரத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தொடங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+