சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு.. கடலூரில் திமுக பிரமுகரை தாக்கிய சம்பவத்தில் பரபரப்பு
கடலூர்: நேற்றைய தினம் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் பங்கேற்ற போது அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.. சீமான் காரை மறித்து திமுக பிரமுகர் கோஷமிட்ட நிலையில், அவரை சீமான் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இப்போதே அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் இந்தக் கூட்டத்தை நடத்தியது.

சீமான்
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் தங்கள் 20 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றத் தர வேண்டும் என்பதை முன்வைத்து இந்த மாநாட்டை நடத்திய நிலையில், அதில் சிறப்பு விருந்தினராகச் சீமான் பங்கேற்றார். இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகள் குறித்து சீமான் பேசியிருந்தார். அதுவரை எந்தவொரு சிக்கலும் இல்லாமலேயே இருந்தது.
கூட்டத்தை முடித்துக் கொண்டு சீமான் கிளம்ப ரெடியானார். அவர் காரில் ஏறிய நிலையில், காரும் புறப்பட தயாரானது. அப்போது திடீரென திமுக நிர்வாகி ஒருவர் சீமான் காரை மறித்துள்ளார். சீமான் ஒழிக எனக் கோஷமிட்ட அவர், தொடர்ந்து சில மோசமான கருத்துகளையும் சொல்லி சீமானை திட்டியுள்ளார். இதை கேட்ட அங்கிருந்த நாதகவினர் அவரை சுற்றி வளைத்துள்ளனர்.
தாக்குதல்
அப்போது திடீரென காரில் இருந்து இறங்கி வந்த சீமான், அந்த நபரைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அங்கு அதிகளவில் நாம் தமிழர் கட்சியினர் இருந்த நிலையில், அவர்களும் அந்த திமுக பிரமுகரைத் தாக்கியுள்ளனர். இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த நபரின் சட்டை கிழிந்து காயமடைந்துள்ளார். அதன் பிறகே அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் சீமானை அழைத்துச் சென்றனர்.
பரபரப்பு
மேலும், போலீசாரும் தலையிட்டு திமுக பிரமுகரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். சீமான் தொடர்பாகக் கோஷமிட்ட நபர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகி ரங்கன் என்று தெரிய வந்தது.. இரவே அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்குப்பதிவு
இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தங்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
-
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைகிறார் – வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை











Click it and Unblock the Notifications