கடலூரில் ரயில் மோதியதும்! 50 மீட்டர் தூரத்துக்கு வீசப்பட்ட பள்ளி வேன்! நடந்தது என்ன?
கடலூர்: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதும், அந்த பள்ளி வேனானது 50 மீட்டர் தூரத்திற்கு பறந்ததாக அங்கிருந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர். மேலும் கேட் கீப்பர் குறித்தும் ஏராளமான புகார்களை சொல்கிறார்கள்.
கடலூர் செம்மங்குப்பத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேன் ஒன்று பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றது.

அப்போது அவ்வழியாக விழுப்புரம்- மயிலாடுதுறை செல்லும் ரயிலானது மோதியதில் பள்ளி வேன் அப்படியே 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் வேன் உருக்குலைந்து போனது. அதில் மாணவர்கள் நிமலேஷ், சாருமதி, செழியன் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் காயமடைந்த நிமலேஷின் சகோதரர் விஸ்வாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அது போல் பள்ளி வேன் ஓட்டுநர் சங்கரும் கழுத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை.
இதனால் ரயில் வர தாமதமாக இருக்கலாம், இல்லாவிட்டால் ரயில் சீக்கிரமாக கடந்து சென்றுவிட்டதாகதான் அங்கிருந்தவர்கள் நினைத்து தண்டவாளத்தை கடந்தனர். அப்போது பள்ளி வேன் கடந்ததுமே ரயிலும் வந்துவிட்டது. உடனே வேன் மீது மோதியதில் ரயில் 50 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
அப்போது வேனானது குழந்தைகளுடன் அப்படியே பறந்தது. இதற்கு முழுக்க முழுக்க கேட் கீப்பரின் அலட்சியம்தான் காரணம். அவர்தான் கேட்டை மூடாமல் தூங்கிவிட்டார். இறந்த அந்த பெண் குழந்தையை பார்க்கவே முடியவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். விபத்தில் அதே இடத்தில் நிமலேஷ் என்ற மாணவன் உயிரிழந்துவிட்டார். மேலும் செழியன், சாருமதி, விஸ்வாஷ் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு செழியன், சாருமதி இறந்துவிட்டனர்.
இவர்கள் சுப்பிரமணியபுரம் திராவிடமணியின் பிள்ளைகள்தான் சாருமதியும் செழியனும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் விஷ்வாஷும் நிமலேஷும் சகோதரர்களாம். அவர்களில் நிமலேஷ் உயிரிழந்துவிட்டார்.
தற்போது சாருமதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது மக்கள் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications