2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் தமிழகத்தில் அரசியல் இல்லை. திமுகவிற்கோ அதிமுகவிற்கோ ஏன் தற்போதைய த.வெ.க விற்கு கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்டாயம் தேவை. நான்கு சீட்டு 6 சீட்டு கொடுத்து இரண்டு சீட்டுகளில் ஜெயிக்க வைத்து ஓரங்கட்டலாம் என நினைத்தால் விடுதலை சிறுத்தைகள் தான் மையத்தில் நிற்கும் என கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், "இந்தத் தேர்தல் நாம் எதிர்பாராத முடிவு என்பதை விட, எதிர்பார்த்த முடிவுதான். ஆனால், இவ்வளவு பெரிய தலைகீழ் மாற்றம் உருவாகும் என நாம் எதிர்பார்க்கவில்லை. நான் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனச் சிந்தித்துச் செயல்பட்டதன் காரணத்தை இப்போது உணர்ந்திருப்பீர்கள்.

Thirumavalavan

ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் விசிக

தமிழ்நாட்டுத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது என்பதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கிற சக்தியாக விசிக இருக்கும் என்றும், தேர்தலுக்குப் பிறகு அரசியல் கூட்டணி மாறும் என்றும் நான் கூறியிருந்தேன்.

சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்ற ஊகம்

இந்த நேரத்திலே நான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தேன். இதையெல்லாம் நான் தேர்தலுக்கு முன்பே சரியாக ஊகித்தேன். தமிழ்நாடு அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியலும் இருக்க முடியாது.

மக்களின் பேராதரவோடு வளர்ந்த இயக்கம்

இதுவரை நாம் தனித்துப் போட்டியிட்டு நமது வாக்கு வங்கி எவ்வளவு என்பதைத் தேர்தல் களத்தில் நிரூபிக்கவில்லை. ஆனாலும் மக்களின் பேராதரவோடும், அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடும், ஜனநாயக சக்திகளின் வாழ்த்துகளோடும் தான் நாம் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ளோம்.
பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை நிரூபித்த பின்னரே கூட்டணி சேர்ந்தன. நாம் தமிழர் கட்சி கூட்டணி சேரவில்லை என்றாலும் கூட, தங்களுடைய தனிப்பட்ட வாக்கு வங்கியைத் தேர்தல் களத்தில் உறுதி செய்துள்ளார்கள்.

பேரமின்றி கூட்டணிகளைத் தீர்மானிக்கும் விசிக

தங்களுடைய வாக்கு வங்கி எவ்வளவு உள்ளது என்பதைத் தனித்துப் போட்டியிட்டு நிரூபிக்காமலேயே, தொடர்ந்து கூட்டணிகளில் முதன்மையான இடத்தில் நீடிக்கும் ஒரே கட்சி விசிக மட்டும்தான். 'எங்களுக்கு இத்தனை சீட்டுகள், இந்தப்பதவி வேண்டும்' என்று நாம் யாரிடமும் பேரம் பேசுவதில்லை.
தற்போது தமிழகத்தில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும், ஏன்... இன்றைய தவெகவிற்கும் (தமிழக வெற்றிக் கழகம்) கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கட்டாயம் தேவைப்படுகிறது. இதை நாம் எப்படிச் சாத்தியமாக்கி இருக்கிறோம் என்பதுதான் இங்குப் பலருக்குக் கண்ணை உறுத்திக் கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் திட்டமிட்ட அவதூறுகள்

விடுதலைச் சிறுத்தைகள் இப்பொழுது பலவீனப்பட்டுவிட்டது போல ஒரு தோற்றத்தைச் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு உருவாக்கப் பார்க்கிறார்கள். சற்றுப் புள்ளிவிவரங்களைப் பாருங்கள், 11% வாக்கு வைத்திருந்த பாஜக 2.5%க்கும், 8% வாக்கு வைத்திருந்த நாம் தமிழர் கட்சி 4%க்கும் போய்விட்டன.

சரிவைச் சந்தித்த பிரதான கட்சிகள்

கடந்த தேர்தலில் 66 இடங்களில் வெற்றி பெற்றிருந்த அதிமுக, இந்தத் தேர்தலில் 47 இடங்களுக்கு வந்துவிட்டது. அதேபோல, ஆளுங்கட்சியாக இருந்த திமுக 59 தொகுதிகளாகச் சுருங்கிப் போய்விட்டது. இதையெல்லாம் யாரும் விமர்சிக்க முன்வருவதில்லை.

அங்கீகாரம் பெற்ற கட்சியாக விசிக

விசிக போட்டியிட்ட எட்டு இடங்களில் இரண்டில் தான் வென்றது என அவதூறுகளைக் கட்டமைக்கிறார்கள். ஏனென்றால், திருமாவளவனையும் விசிகவையும் தமிழ்நாடு ஒரு மாபெரும் சக்தியாக அங்கீகரித்துவிட்டது. தனித்துப் போட்டியிடாமலேயே அங்கீகாரம் பெற்ற கட்சியாக விசிக கம்பீரமாக வளர்ந்துவிட்டது.

ஏளனம் பேசியவர்களுக்குப் புரிந்த வலிமை

'இரண்டு சீட்டுதானே' என நம்மை ஏளனம் பேசியவர்களுக்கு, 24 மணி நேரத்தில் அதன் வலிமை புரிந்திருக்கும். அந்த இரண்டு இடங்கள் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் ஆட்சியே இல்லை என்கிற இக்கட்டான அரசியல் சூழலை மக்கள் இங்கே உருவாக்கியிருந்தார்கள். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது' என நான் அப்பொழுதே கூறினேன். மற்றவர்கள் 108 இடங்களில் வென்றிருந்தாலும், சிறுத்தைகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். என் தாய்மடி போன்ற காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளோம்.

டெல்லியில் ஒலிக்கும் 'கிங் மேக்கர்'

நான் டெல்லிக்குப் போய் இறங்கினாலும் அங்கே என்னைப் பார்க்கக்கூடிய இந்தி பேசுபவர்கள் கூட என்னை 'கிங் மேக்கர்' என அழைக்கிறார்கள். அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் என்னை ஆட்சியாளர்களை உருவாக்கக்கூடியவர் எனப் போற்றுகிறார்கள். ன் அரசனாகாவிட்டாலும், பிறரை அரசனாக்கக்கூடிய வலிமை பெற்ற கட்சிதான் விசிக. நீங்கள் நான்கு சீட்டுகள் கொடுத்து ஓரம் கட்டலாம், ஆறு சீட்டுகள் கொடுத்து ஓரம் கட்டலாம். ஆனால், சிறுத்தைகள் மட்டும்தான் எப்போதும் தமிழக அரசியல் மையத்தில் நிற்பார்கள்.

லாப நஷ்டமில்லாத மக்கள் தொண்டு

இதையெல்லாம் நான் குறி சொல்வது போல் முன்னரே சொல்லி வருகிறேன். தம்பி ஒருவன் சொன்னான், 'அண்ணே, நீங்க வேப்ப மரத்தின் கீழே உட்கார்ந்து குறி சொன்னால் கூடப் பலிக்கும்' என்று. நான் அரசியலில் லாப நஷ்டக் கணக்கு பார்க்கவில்லை, மக்களுக்காகத் தொண்டாற்றுகிறேன்." வ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+