''எவனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது! எங்கே போனாலும் தனியாகத் தான் போவேன்''! -திமுக MLA ஐயப்பன்
கடலூர்: எவனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் எங்கே போனாலும் தனியாகத் தான் போவேன் எனவும் பேசியிருக்கிறார் கடலூர் திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன். நேற்று முன் தினம் இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற ஐயப்பன் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார்.
அதில் நல்வாய்ப்பாக திமுக எம்.எல்.ஏ. ஐயப்பனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக களமிறங்கி விசாரணையை முடுக்கிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் வீட்டிற்கு அவரது ஆதரவாளர்கள் வெகுவாக திரண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மத்தியில் பேசிய திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன், தன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் ஒரு கருவி மட்டுமே என்றும் அந்தக் கருவியை இயக்கியது யார் என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், தாம் எங்கே சென்றாலும் காருக்கும் முன்னேயும், பின்னேயும் அடியாட்களை அழைத்துச் செல்லமாட்டேன் என்றும் தாம் யாருக்கும் கெடுதல் செய்யாததால் எங்கே போனாலும் தனியாகத் தான் போவேன் எனவும் தெரிவித்தார். எவனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என சவால் விடுத்த அவர் தயவு செய்து நீங்களெல்லாம் கலைந்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தானும் சரி தனது குடும்பத்தினரும் சரி யாருக்கும் துரோகம் செய்ததே கிடையாது என்றும் உழைப்பால் தான் முன்னேறியிருப்பதாகவும் உருக்கமுடன் தெரிவித்தார். தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர் தான் இப்படியொரு கீழ்தரமான மலிவான காரியத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவகாரம் பற்றி முதல்வர் கேட்பார் என்பதால் கடலூர் மாவட்ட காவல்துறையினர் இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications