Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறக்கப்பட்ட வீர மங்கை.. ஆங்கிலேயரை துணிச்சலாக எதிர்த்த தமிழக ஜான்சிராணி அஞ்சலை அம்மாள்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை தந்த பல தியாக செம்மல்களில் ஒருவர் தான் கடலூரை சேர்ந்த வீர பெண்மனி அஞ்சலை அம்மாள். காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சிராணி என பாராட்டப்பெற்ற அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறைவாசம் சித்ரவதைகளை அனுபவித்தார். சுதந்திர தின பேச்சு போட்டி பங்கேற்க ரெடியாகும் மாணவர்களுக்கு இவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக பயன்படுத்ததக்கதாகும்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நம் தாய்நாட்டை மீட்பதற்காக பலரும் பெரும் போராட்டம் நடத்தினர். சிறைவாசம், உயிர் தியாகம் என பல தியாகங்களை செய்த தியாக செம்மல்களின் வீர வரலாறுகளை சுதந்திர தினத்தில் நினைவு கூர வேண்டியது அவசியம்.. நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை தந்த பல தியாக செம்மல்களின் வரலாறு பூமிக்குள் புதைந்து இருக்கும் புதையலை போன்றுதான் உள்ளது.

independence day 2024 independence day 2024

அஞ்சலை அம்மாள்: இந்த வரிசையில் கடலூரை சேர்ந்த வீர பெண்மனி அஞ்சலை அம்மாளும் ஒருவர். காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சிராணி என பாராட்டப்பெற்ற அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறைவாசம் சித்ரவதைகளை அனுபவித்தார். தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தினார். அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் தேச விடுதலைக்காக ஆற்றிய பங்கு குறித்தும் இங்கே பார்க்கலாம்.

1890 ஆம் ஆண்டு அன்று கடலூரில், அஞ்சலை அம்மாள் பிறந்தார். முருகப்பா என்பவரை 1908-இல் திருமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே அரசியல் பற்றியும் ஆங்கிலேயரின் அடக்குமுறை பற்றியும் அறிந்து கொண்ட அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவரது கணவரும் அஞ்சலை அம்மாளுக்கு தக்க உறுதுணையாக இருந்து போராட்டங்களில் பங்கேற்றார்.

பாரதியாரால் பாராட்ட பெற்றவர்: அஞ்சலை அம்மாள் - முருகப்பா தம்பதி நெசவுத் தொழிலையே முதன்மையாக செய்து வந்தனர். சென்னையில் சைதாப்பேட்டைக்கு குடிபெயர்ந்த அஞ்சலை அம்மாள் தறி நெசவுப்பணியோடு காங்கிரசில் இணைந்து கட்சிப்பணியும் செய்தார். மகாத்மா காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். 1921 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு அஞ்சலை அம்மாளுக்கு உண்டு.

இந்திய விடுதலை போராட்டத்திற்காக தனது குடும்ப சொத்தையும் விற்று செலவு செய்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகிற இந்த காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாரதியாரால் பாராட்ட பெற்றவர் என்ற சிறப்பும் அஞ்சலை அம்மாளுக்கு உண்டு.

ஓராண்டு சிறை: சிப்பாய் கிளர்ச்சியின் போது பல சிப்பாய்களை படுகொலை செய்த ஆங்கிலேய படை தளபதி ஜேம்ஸ் நீல் நினைவாக மவுண்ட் சாலையில் ஒரு சிலையை ஆங்கிலேய அரசு நிறுவியது. 1860 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சிலையை அகற்ற கோரி 1927 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் சிலையை உடைத்ததற்காக ஓராண்டு சிறை தண்டனையும் பெற்றார்.

1931-ல் கடலூரில் நடந்த உப்புச் சத்தியாகிரக போராட்டத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாகக் காயமடைந்தார். அதன்பின் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். 1931 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு அஞ்சலை அம்மாள் தலைமை தாங்கினார்.

காந்தியை சந்திக்க விடாமல்: 1932-ல் காந்தியின் மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்களை திரட்டிக் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினார், இதற்காக அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1933-ல் சட்டமறுப்பு மறியலில் பங்கேற்றார். அதே ஆண்டு அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்று மாத சிறைத்தண்டனை பெற்றார்.

1934-ம் ஆண்டு காந்தியடிகள், கடலூருக்கு வந்தபோது அஞ்சலை அம்மாள் சந்திக்க முயன்றார். ஆனால் காந்தியை அஞ்சலை அம்மாள் சந்திக்க விடாமல் ஆங்கிலேய அரசு தடை விதித்தது. எனினும், இந்த தடையை உடைத்து அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து வந்து காந்தியைச் சந்தித்தார். அஞ்சலை அம்மாளின் இந்த துணிவை பார்த்த காந்தி "தென்னிந்தியாவின் ஜான்சிராணி" என்று அஞ்சலை அம்மாளை அழைத்தார்.

அஞ்சலை வாய்க்கால்: 1947- ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தனக்குத் தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தார் அஞ்சலை அம்மாள். 1937, 1946, 1952 என 3 முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியிலிருந்து அஞ்சலை அம்மாள் தேர்வு செய்யப்பட்டார். தான் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, தீர்த்தம்பாளையம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வீராணம் கால்வாயிலிருந்து கிளை வாய்க்கால் வெட்டி தண்ணீர் பஞ்சம் தீர்த்தார்.

அக்கிளை வாய்க்கால், "அஞ்சலை வாய்க்கால்" என அழைக்கப்படுகிறது. தனது கடைசி காலத்தில் முட்லூர் என்ற கிராமத்தில் விவசாய பணிகள் செய்து வந்த அஞ்சலை அம்மாள், 1961-ம் ஆண்டு பிப்ரவரி 20-ல் காலமானார். தமிழ்நாடு அரசு சார்பில் கடலூர் காந்தி பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+