இப்ப போஸ்டர், பேனர் எல்லாத்துலயும்....தேர்தலுக்கு பிறகு பதவி.. '2-ம் போர்வாள்' துரைவையாபுரி 'பராக்'
சென்னை: தன்னுடைய மகன் துரைவையாபுரி தேர்தலில் போட்டியிடமாட்டார்; மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கூறிவருகிறார். ஆனால் வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான போஸ்டர்கள், பேனர்களில் துரைவையாபுரி படத்தை தவறாமல் மதிமுக நிர்வாகிகள் இடம்பெற செய்துவிடுகின்றனர்.
திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக எனும் தனி கட்சி தொடங்கியவர் வைகோ. அதனால் மதிமுகவில் வாரிசு அரசியல் வராமல் இத்தனை ஆண்டுகாலம் கவனமாக இருந்து வருகிறார் வைகோ.
ஆனால் அண்மைகாலமாக மதிமுக நிர்வாகிகள் இல்ல நிகழ்வுகளுக்கு துரை வையாபுரி தவறாமல் அழைத்து செல்லப்படுகிறார். இதன் அடுத்த கட்டமாக திமுகவில் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது போல மதிமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியை வைகோ மகன் துரைவையாபுரிக்கு தர வேண்டும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வைகோ நிராகரிப்பு
இருப்பினும் வைகோ, என் மகன் தாயகம் பக்கமே வரமாட்டார் என கூறினார். சட்டசபை தேர்தலில் துரை வையாபுரி போட்டியிட வாய்ப்பிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் நம்மிடம் தகவல் தெரிவித்தனர். அதனையும் நாம் பதிவு செய்திருந்தோம்.

போஸ்டர்களில் துரை வையாபுரி
கடந்த 2 நாட்களாக இந்த செய்தியை வைகோ திட்டவட்டமாக மறுத்தும் வருகிறார். அதேநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் மதிமுகவின் கட்சி நிகழ்ச்சிகளுக்கான பேனர்கள், போஸ்டர்கள் அனைத்திலும் துரை வையாபுரியின் படமும் இடம்பெற்று கொண்டிருக்கிறது. வழக்கமாக இதனை வைகோ அனுமதிக்கமாட்டார். ஆனால் தற்போது வைகோவும் இதை மவுனமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

தேர்தலுக்கு பின் ஒரு திட்டம்
அதேநேரத்தில் துரை வையாபுரி குறித்த கேள்விகளுக்கு, தேர்தலுக்கு பின் நடைபெறும் பொதுக்குழுவில் ஒரு திட்டத்தை அறிவிக்கப் போகிறேன் என இடைவிடாமல் வைகோ கூறி வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு பின்னர் துரை வையாபுரிக்கு கட்சியில் மிக முக்கிய பதவி கொடுக்க இருப்பதையே வைகோ இப்படி மறைமுகமாக சொல்லி வருகிறார் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.

வருகிறார் துரை வையாபுரி
நாம் ஏற்கனவே எழுதியதைப் போல மதிமுக இளைஞரணி செயலாளர் பதவியை துரை வையாபுரிக்கு கொடுத்து, அந்த அணிக்கு தனியே ஒரு அலுவலகத்தையும் உருவாக்கி தரும் திட்டமாகவும் அது இருக்கலாம் என்கின்றனர் மதிமுக நிர்வாகிகள். ஆகையால் துரை வையாபுரி எனும் புதிய அரசியல்வாதி அதாவது மதிமுகவினரின் வரிகளில் சொல்வதானால் '2-ம் போர்வாள்' துரைவையாபுரி தமிழக அரசியல் களத்துக்கு வருவது உறுதி என்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டிகாட்டுகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக்












Click it and Unblock the Notifications