கடலூரில் களமிறங்கும் திட்டத்தில் அமைச்சர் மகன்! களப்பணியில் உற்சாகம்! திமுக தலைமையின் முடிவு?
கடலூர்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் மகன் கதிரவன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாராம்.
இது குறித்து சில மாதங்களுக்கு முன்பே நாம் கூறியிருந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய கடலூர் சிட்டிங் திமுக எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளிட்ட இன்னும் பல சர்ச்சைகள் இருப்பதால் அவருக்கு மீண்டும் சீட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மகன் தான் அடுத்த வேட்பாளர் என்ற பேச்சு கடலூர் மாவட்ட திமுகவினர் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் ஆசியும் ஆதரவும் கதிரவனுக்கு உண்டு என்பதால், 2024-ல் இவர் தான் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என அமைச்சரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆகியோரது வாரிசுகள் தற்போது நாடளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் கதிரவனும் இடம்பெறுவாரா என்பது திமுக தலைமையின் கையில் தான் உள்ளது.
ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் தரப்பு அமைச்சர் மகனுக்கு சீட் கொடுத்தால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கும் என்பதால் சர்வே நடத்திய பிறகு தான் யாருக்கு சீட் என்பதில் திமுக தலைமை இறுதி முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications