கரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.
கடலூர்: சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான வீராணம் ஏரியில் வழக்கத்துக்கு மாறாக 2அடி உயரம் வர அலை சீற்றம் இருந்தது. இதை பொதுமக்கள் அச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
Recommended Video
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் கொள்ளளவு கடல் மட்டத்திலிருந்து 47.50 அடிகள் ஆகும். வழக்கமாக ஏரி 45 அடிகளுக்கு மேலே உயரும் பட்சத்தில் ஏரி ததும்பும் போது சிறிதாக அலை அடிக்கும் என்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் நிவர் புயல் அதிகாலை கரையை கடந்தும் அதன் தாக்கத்தால் அதிகாலை முதலே காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வானிலை மேக மூட்டத்துடன் குளிந்த காற்று நிலவியது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.98 அடிகள் இருந்த நிலையில் வழக்கத்தைவிட 2 அடிகள் உயரத்திற்கு அலை அடித்த வண்ணம் இருந்தது.

வீராண ஏரியில் அலை அடிக்கும் செய்தியை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியில் கூடினர். ஆச்சர்யமுடன் பார்த்துசென்றனர்.












Click it and Unblock the Notifications