பச்சை பசேல் நெற்பயிர்களை அழித்த என்எல்சி.. “அறுவடைக்கு தயாரான நிலத்தில் இறங்கவில்லை”: பரபர விளக்கம்!
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்த நிலங்களில் இன்று காலை முதல் அவற்றை அழித்து நிலம் சமன் செய்யும் பணியில் என்.எல்.சி ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக என்.எல்.சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே மேல்வளையமாதேவி கிராமத்தில் ஏற்கனவே கையகப்படுத்திய விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி இன்று காலையில் தொடங்கியது.

வயல்களில் இறங்கிய பொக்லைன்: வளையமாதேவி சுற்று வட்டார பகுதிகளில் விடிந்தும் விடியாமல் 35க்கும் மேற்பட்ட ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை அழித்து, நிலம் சமன் செய்யும் பணியில் ஈடுபட்டதைப் பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, நிலம் கையகப்படுத்தல் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடி நடந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் குவிப்பு, பதற்றம்: வளையமாதேவி சுற்றுவட்டாரப் பகுதியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்யத் தயாராக உள்ள நிலையில், பச்சை பசும் வயல் வெளிகளுக்குள் புகுந்து கால்வாய் வெட்டும் பணி தொடங்கியுள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வளையமாதேவி பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் டிஐஜி ஜியாவுல் ஷேக், கடலூர் எஸ்பி ராஜாராமன் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் யாரும் நிலம் சமன்படுத்தும் பகுதிக்குள் நுழையாதவாறு போலீசார் சுற்றிலும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
என்.எல்.சி விளக்கம்: இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து என்.எல்.சி விளக்கம் அளித்துள்ளது. மேல் வளையமாதேவியில் அறுவடை நெற்பயிர்களை அழித்து கால்வாய் போடவில்லை, ஒரு மாத கால நெற்பயிர்களை மட்டுமே அழித்து கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றதாக என்.எல்.சி விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலங்கள் 2006ஆம் ஆண்டே கையகப்படுத்தப்பட்டன. கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட பின்பே தற்போது பணிகள் நடைபெறுகின்றன. இழப்பீடு கொடுத்த பிறகும், மனிதாபிமான அடிப்படையில் நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதித்தோம்.
இப்போது விரிவாக்கப் பணிகள் தொடங்கி இருப்பதால் தற்போது நிலத்தை சமன் படுத்தும் பணிகள், கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன என என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் வரை காத்திருக்காமல் வயல்களில் புகுந்துள்ளதற்கும், கூடுதல் இழப்பீடு கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications