"இரண்டு நாட்களா தூக்கம் வரல.." தமிழக அரசை நான் எச்சரிக்கிறேன்! கைதுக்கு பின் ஆவேசமான அன்புமணி
கடலூர்: என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக பாமகவினர் நடத்திய போராட்டத்தில் மிகப் பெரிய வன்முறை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி பகுதியில் விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.. என்எல்சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமகவினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர். உடன் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

போராட்டம்: என்.எல்.சி 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளைக் கைவிட வலியுறுத்தி இந்த்ப போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார். அப்போது அவரை அங்கிருந்து அழைத்துச் செல்ல விடாமல் பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வன்முறையும் ஏற்பட்டதால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்குப் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதற்கிடையே போலீஸ் வாகனத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "விளைநிலங்களை இதற்குப் பின்னரும் தமிழ்நாடு அரசு என்எல்சி நிர்வாகத்திற்காக எடுத்துக் கொடுக்கக் கூடாது. கடந்த 66 ஆண்டுகளாக என்எல்சி நிர்வாகம் இங்கே இயங்கி வருகிறது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் அவர்கள் அழித்துவிட்டார்கள்.

அன்புமணி ராமதாஸ்: எட்டு அடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று 800 அடிக்குச் சென்றுவிட்டது. உள்ளூர் மக்களுக்கு வேலை இல்லை. இந்த பகுதியில் வாழ்வாதாரமே இல்லாமல் போய்விட்டது. அனைத்தையும் என்எல்சி அழித்துவிட்டது. இப்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாகவும் வெளிமாநிலத்திற்கு மின்சாரத்தை விற்பதாகவும் அமைச்சர் சொல்கிறார். இந்த நேரத்தில் நமக்கு என்எல்சி எதற்குத் தேவை.
காற்றாலை, சூரிய ஒளி, நீர் ஆகியவற்றில் இருந்து நம்மால் இப்போது புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எடுக்க முடியும். மின்சாரம் தயாரிக்க எத்தனையோ மாற்று வழிகள் இருக்கிறது. ஆனால், உணவுக்கு ஒரு வழிதான் இருக்கிறது. அது நிலம் தான். அந்த நிலத்தைப் பாதுகாக்கத் தான் நாங்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம். கடந்த ஓராண்டாகக் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் எனப் பல வகை போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
தூக்கம் வரல: கடந்த இரண்டு நாட்களாக போலீசாரை ஏவிவிட்டு, தமிழக அரசு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துகிறது. கதிர் விடும் நெற்பயிர்களை அழிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியவில்லை. எனக்கு இரண்டு நாட்களாகத் தூக்கம் வரவில்லை. இதன் காரணமாகவே உடனடியாக இங்கே போராட்டத்தில் இறங்கினோம். இதை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.. இல்லையென்றால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மேற்கு வங்கத்தில் நடந்தது போன்ற சூழல் இங்கே வரக் கூடாது.
எச்சரிக்கிறேன்: தமிழக அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். உடனடியாக இதை நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கே அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்துகிறோம். இந்த மாவட்டம் வளம் பெற வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும். இதற்குத் தமிழக அரசு என்எல்சி நிர்வாகத்திற்காக நிலத்தைக் கையகப்படுத்தாது என்ற அறிவிப்பு முதல்வரிடம் இருந்து வர வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் மத்திய அரசையும் தான் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம்.
தமிழ்நாடு அரசு எதற்காக என்எல்சிக்கு உடந்தையாக இருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசை எதிர்க்கும் திமுக இந்த விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது ஏன்.. உடந்தையாக இருப்பது ஏன்? என்எல்சி நிர்வாகத்தைத் தனியாருக்கு விற்பனை செய்யப்போவதாகச் சொல்கிறார்கள். தனியாருக்கு விற்கப் போகும் நிலத்திற்கு எதற்காக இத்தனை விவசாய நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கிறீர்கள்" என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
-
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications