மீனவர் வலையில் சிக்கிய பிரம்மோஸ் ஏவுகணை பாகம்.. கடலூரில் பரபரப்பு!
கடலூர்: பிரம்மோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் கடலூரில் மீனவர் வலையில் சிக்கியது. கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் விசாரணை.
கடலூர் தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் அறிவரசன் வழக்கம்போல் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது தான் வீசிய வலையில், உருளை வடிவிலான மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது.

அதனை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டுவந்த அறிவரசன், தேவனாம்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அந்த மர்ம பொருள், பிரம்மோஸ் BIFP-04 என்ற ஏவுகணையின் உதிரிபாகம் என்பது தெரியவந்தது. இந்தியா - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை அதிக அளவு வெடிபொருட்களை தாங்கி செல்வதுடன், நீண்ட தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
தற்போது மீனவர் வலையில் சிக்கியுள்ள உதிரிபாகம் கடந்த 2017 - 18 ஆண்டுகளில் ஏவப்பட்ட ஏவுகணையில் இருந்த உதிரிபாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உருளை வடிவிலான இந்த உதிரிபாகம் சுமார் 60 கிலோ எடை உள்ளது. மீனவரின் வலையில் ஏவுகணையின் பாகம் சிக்கியது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதனை, ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதனிடையே கடலோர காவல்படையினர் மற்றும் கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலைய போலீசார் இந்த உதிரிபாகம் எந்த ஆண்டை சேர்ந்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயரதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி கடலில் மீனவர் ஒருவரின் வலையில் இஸ்ரோ அனுப்பிய ராக்கெட்டின் உதிரிபாகம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications