துரோகிகளால் கூட விஜயகாந்த்தை கெட்டவர் என்று சொல்ல முடியாது.. பிரேமலதா அதிரடி!

சொந்த பணத்தில் கட்சியை நடத்தி வருபவர் விஜயகாந்த் என்று பிரேமலதா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தேமுதிக கடலூர் மாவட்ட கழக செயலாளர் இல்ல திருமணவிழாவில் பிரேமலதா விஜகாந்த் பேச்சு -வீடியோ

    பண்ருட்டி: அதிமுக, திமுக ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துவதுபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியை நடத்தவில்லை, அவர் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார் என்றும் விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று சொல்ல முடியாது என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    பண்ருட்டியில் தேமுதிக கடலூர் மாவட்ட கழக செயலாளர் ப.சிவக்கொழுந்து இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பிறகு பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

    [இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய நவ.27ம் தேதிவரை தடை.. ஹைகோர்ட் அதிரடி! ]

     ஏன் நேரம் ஒதுக்கவில்லை?

    ஏன் நேரம் ஒதுக்கவில்லை?

    தீபாவளி தினத்தன்று நீதிமன்றம் 2 மணி நேரம் நேரம் ஒதுக்கீடு செய்தது போன்று டாஸ்மார்க் கடைகள் நேரத்தையும் 2 மணி நேரமாக கொடுத்திருக்கலாம். தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை தீபாவளி தினத்தன்று 600 கோடியை எட்டியது மிக வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும். தீபாவளிக்கு பட்டாசு படிப்பதற்கு நேரம் ஒதிக்கி நீதிமன்றம் டாஸ்மார்க் விற்பனைக்கு ஏன் நேரம் ஒதுக்கவில்லை?

     பாலியல் புகார்கள்

    பாலியல் புகார்கள்

    தமிழகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஆட்சி முழுக்க முழுக்க ஊழல் ஆட்சி. லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் மீது பாலியல் புகார் உள்ளது.. இதனை விசாரிக்கும் இடத்தில் துணை முதல்வர் உள்ளார்.. ஆனால் அவர் மீது சிபிஐ புகார் உள்ளது.. இதை விசாரிக்கும் இடத்தில் ஆளுநர் உள்ளார்.. ஆனால் அவர் மீது நிர்மலாதேவியின் பாலியல் புகார் உள்ளது.

     சொந்த பணம்தான்

    சொந்த பணம்தான்

    எனவே தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளாகும். அவர்கள் ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துகின்றனர். விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார். விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று கூறமுடியாது.

     அதிகாலையில் பட்டாசு

    அதிகாலையில் பட்டாசு

    என்னைப்பொறுத்தவரை தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகின்றது. தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசு வெடித்திருந்தால் கொசுக்கள் அனைத்தும் அழிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.

     அமோக வெற்றி பெறும்

    அமோக வெற்றி பெறும்

    தமிழகத்தில் தேமுதிக மூன்றாவது கட்சியான குறிப்பிடுவது மிகத் தவறான விஷயம். தமிழகத்தை பொருத்தவரை தேமுதிக முதல் கட்சியாக திகழ்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற தேர்தல் இருந்தாலும் சரி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும். அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. அமோக வெற்றிபெறும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+