சிதம்பரம் அருகே அரசு கல்லூரி பேராசிரியர் மீது பயங்கர தாக்குதல்
சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முட்லூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. மகளிர் தினத்தன்று இந்த கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது விசில் அடித்து ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்து கோபம் அடைந்த பேராசிரியர் மணியரசன், முன்னாள் மாணவர்களை வெளியேற சொல்லியிருக்கிறார். இதனால் கோபத்தில் இருந்த முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே பேராசிரியர் மணியரசனை சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
முன்னாள் மாணவர்கள் என்று கூறப்படும் சிலர் பேராசிரியர் மணியரசனை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். பேராசிரியரை யார் யார் தாக்கினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரிய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications