ஒடியாங்க ஓடியாங்க ஒரு கிலோ 30 ரூபாய் - கடலூரில் ஒரு மணி நேரத்தில் 1 டன் தக்காளி விற்பனை
கடலூரில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் ஒரு மணி நேரத்தில் 1 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்: ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் போட்டி போட்டிக்கொண்டு வாங்கிச் சென்றனர். கடலூரில் ஒரு மணி நேரத்தில் 1 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி இன்று ஏழைகளுக்கு எட்டாத கனியாகி விடும் நிலையில் உள்ளது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்த தக்காளி தற்போது கிடுகிடுவென உயர்ந்து நேற்றைய தினம் ஒரு கிலோ 150 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையிலுள்ள பண்ணை பசுமை கடைகளில் 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை குறைக்கும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மழை இல்லாத மாநிலங்களில் இருந்து தாக்காளியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தக்காளி விலையை கட்டுப்படுத்த, குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளி மற்றும் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலையில் தக்காளி விலை குறையத் தொடங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் தக்காளி கடலூரில் உள்ள உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும். தற்போது கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள் சேதமடைந்ததால் இருந்து வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்நிலையில் கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியில் தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக ஒரு கடையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது இதனை அறிந்த பொதுமக்கள் அக்கடையில் தக்காளியை வாங்க குவிந்தனர். சுமார் ஒரு மணி நேரத்தில் கடையில் இருந்த ஒரு டன் தக்காளிகள் அனைத்தும் விற்பனையானது. இதுகுறித்து தகவல் தகவலறிந்து தாமதமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதனிடையே சென்னை கோயம்பேட்டில் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மதுரையில் கிலோ 90 ரூபாய்க்கும்,நீலகிரி மாவட்டம் கூடலூரில் கிலோ 55 ரூபாய்க்கும் ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே ஒரு கிலோ தக்காளியை 40 ரூபாய்க்கு தரத் தயார் என்று உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications