சிதம்பரத்தில் மாபெரும் இழுபறிக்குப் பின் வெற்றியை ஈட்டிய திருமாவளவன்!
சிதம்பரம்: சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மிகப் பெரிய இழுபறிக்குப் பின்னர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. அக்கட்சித் தலைவர் திருமாவளவன், சிதம்பரத்திலும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்திலும் போட்டியிட்டனர்.
அதிமுக அணியில் இடம்பெற்ற பாமக செல்வாக்கு உள்ள இந்த இரு இடங்களும் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வாக்கு எண்ணிக்கை முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

நிலவரத்தை வெளியிட மறுப்பு
ஆனால் திடீரென வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை அதிகாரிகள் வெளியிட மறுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் திருமாவளவன் உள்ளிட்டோர் வாதிட்டும் பார்த்தனர்.

மக்கள் கடும் அதிருப்தி
திருமாவளவனின் வெற்றி அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட வரலாறு காணாத தாமதம் மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது. சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் பானைச் சின்னத்தில் களம் கண்டார்.

என்ன காரணம்?
கிராமம் கிராமமாக சென்று தீவிரப் பிரச்சாரம் செய்த திருமாவளவன், நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. ஆனால் நேற்று வெற்றி அறிவிப்பை வெளியிடுவதில்தான் தேர்தல் ஆணையம் மிகப் பெரிய தாமதம் செய்தது. இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை.

ஆதரவாளர்கள் கொந்தளிப்பு
நள்ளிரவைத் தாண்டியும் முடிவு வெளிவராமல் இழுபறியாகபோய்க் கொண்டிருந்தது. திருமாவின் வெற்றியைப் பார்க்காமல் இந்த தேர்தல் முடிவு நிறைபெறாது என்ற ஏக்கத்தில் மக்களும் தூங்காமல் சமூக வலைதலங்களில் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

வெற்றி பெற்றார் திருமாவளவன்
ஒரு வழியாக திருமாவின் வெற்றியை தேர்தல் அதிகாரிகள் நள்ளிரவைத் தாண்டி வெளியிட்டனர். அதன்படி திருமாவளவன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட 3219 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications