முட்டையை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டவுடன் முட்டைகளை துப்பிய வீடியோ காட்சிகள்
Recommended Video
கடலூர்: அடைகாத்த கோழியை கொன்று விட்டு முட்டைகளை விழுங்கிய பாம்பு, பிடிபட்டவுடன் முட்டைகளை வெளியில் துப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் அருகே உள்ள பூலோகநாதர் கோவில் என்ற இடத்தில் பைஜான் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த கோழி முட்டைகளை அடைகாத்து வந்தது. இன்னும் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவர ஓரிரு நாட்களே இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோழி கூட்டினுள் புகுந்த பாம்பு கோழியை கொன்றுவிட்டு அங்கிருந்த முட்டைகளை விழுங்கியது. காலையில் முட்டைகளை விழுங்கிய நிலையில் கூண்டுக்குள்ளேயே இருந்த பாம்பை, பண்ணை உரிமையாளர் கண்டார்.
பின்னர் பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். அந்த இடத்திற்கு வந்த செல்லா லாவகமாக அந்தப் பாம்பினை பிடித்தார். தான் பிடிபட்டதை அறிந்த பாம்பு தான் விழுங்கிய மூன்று முட்டைகளையும் அடுத்தடுத்து கக்கியது.
அதன்பிறகு அந்த பாம்பை எடுத்துச் சென்ற செல்லா காப்பு காட்டில் விட்டு சென்றார். பொதுவாக பாம்புகள் சாதாரணமாக கோழிகள் இடும் முட்டையை விழுங்குவது கிடையாது, கோழிகள் அடைகாக்கும் முட்டையை மட்டுமே பாம்புகள் விழுங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.