Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதம்பரம் லாட்ஜில் காதலன்.. திடீரென மனம் திருந்திய கடலூர் கள்ளக்காதலி.. யாருமே எதிர்பார்க்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ். கார் டிரைவரான இவர் சிதம்பரத்தில் கள்ளக்காதலியுடன் தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார். கள்ளக்காதலி தனது 2 குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவர், தனது குழந்தைகளை கணவரிடம் விடச்சென்றவர் திரும்பி வரவே இல்லை. இதனால் கள்ளக்காதலன் எடுத்த முடிவு சிதம்பரத்தையே ஆடிப்போக வைத்துள்ளது,

கள்ளக்காதல் விவகாரம் பல குடும்பங்களை நிற்கதியாக்கி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார் மகன் ஹரிதாஸ்க்கு 26 வயது ஆகிறது. இவர் கார் டிரைவர். சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 22-ந் தேதி அறை எடுத்து தங்கினார். இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் ஹரிதாஸ் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், அறை கதவை தட்டிப்பார்த்துள்ளார்கள். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கிறது

what happened to the Cuddalore driver who stayed with his Girlfriend in a lodge in Chidambaram

உடனே லாட்ஜ் ஊழியர்கள், அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின் விசிறியில் கார் டிரைவர் ஹரிதாஸ் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே லாட்ஜ் ஊழியர்கள் இது குறித்து கடலூர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கார் டிரைவர் ஹரிதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஹரிதாசுக்கும், மதுராந்தகநல்லூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி கவியரசி(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதும் தெரியவந்தது. கவியரசிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வாரம் கவியரசி தனது குழந்தைகளுடன் கள்ளக்காதலன் ஹரிதாசுடன் திருப்பூருக்கு சென்றார். அங்கு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம்

பின்னர் அங்கிருந்து கடந்த 22-ந் தேதி சிதம்பரத்துக்கு வந்த அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலை கவியரசி தனது 2 குழந்தைகளையும் முதல் கணவரிடம் விட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இதனால் விரக்தியடைந்த ஹரிதாஸ் தனது லுங்கியால் மின்விசிறியில் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டது தொியவந்துள்ளது.

கள்ளக்காதலி தன்னுடன் சேர்ந்து வாழ வராததால் மனமுடைந்து அவர் இந்த முடிவினை தேடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிதாசின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+