ரம்ஜான் பண்டிகை நாளில் ஊரடங்கு.. வீட்டில் தொழுக உத்தரவு - மத்திய பிரதேசத்தின் கார்கோனில் கட்டுப்பாடு
போபால்: ராமநவமி கலவரம் நடந்து வீடுகள் இடிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகைக்கு வாய்ப்புள்ள நாட்களான மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதம் 10 ஆம் தேதி ராம நவமி பண்டிகையின்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி ஊர்வலங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது.
அப்போது மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் மத மோதல்கள் வெடித்தன.

புல்டோசரில் இடிக்கப்பட்ட வீடுகள்
குறிப்பாக மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் ராம நவமி ஊர்வலம் சென்றவர்கள் அங்கிருந்த மசூதிகள், இஸ்லாமியர்கள் குடியிருப்புகளில் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். ஆனால், ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்கள் கல்வீசியதாக கூறி அவர்களின் விடுகளை ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி புல்டோசரை கொண்டு இடிக்கப்பட்டன.

ரம்ஜான் பண்டிகை
இந்த நிலையில், ரமலான் நோன்பு நிறைவடைந்து நாளை அல்லது மே 3 ஆம் தேதி இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளனர். மத்திய பிரதேச மக்களும் பிரச்சனைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ரம்ஜானை மகிழ்ச்சியோடு கொண்டாட தயாராகி வரும் நிலையில், கார்கோன் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு
மோதல்களை தவிர்க்க மே 2 மற்றும் மே 3 ஆம் தேதி கார்கோன் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுமெர் சிங் முஜல்டா உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து தெரித்துள்ள அவர், "ஈத் தொழுகையை வீடுகளில் இஸ்லாமியர்கள் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் அக்ஷய் திருதி மற்றும் பரசுராம் ஜெயந்தி ஊர்வலங்கள் செல்லவும் அனுமதிக்கப்படாது." என தெரிவித்துள்ளார்.

கடைகள் திறக்கப்படும்
ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகள் கடைகளுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக கூறிய அவர், கடைகள் திறந்திருக்க வேண்டும் எனவும், தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சூழலுக்கு ஏற்ப உத்தரவுகள் மாற்றியமைக்கப்படும் எனவும் கார்கோன் கூடுதல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கிறார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications