6 வயது சிறுவன் உயிரை காக்க போராட்டம்.. இதய அறுவை சிகிச்சைக்கு பணமில்லை.. உதவுங்கள் ப்ளீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான், அன்றைய தினம், எனது நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பித்தேன். மருத்துவமனையிலிருந்து என் டாக்ஸிக்கு விரைந்து செல்கிறேன். சென்னையின் பரபரப்பான சாலைகளில் நான் அதை ஓட்டுகிறேன்.

கடைசி பயணியையும் இறக்கிவிட்டுவிட்டு, இரவில் தாமதமாக நான் ஒரு பாக்கெட் பிஸ்கட் சாப்பிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு செல்கிறேன். நான் ஒரு நாள் லீவு கிடைக்குமா என்று மிகவும் சோர்ந்துபோன நாட்கள் உள்ளன, ஆனால் ஒரு நாள் சம்பளத்தை இழக்க என்னால் முடியாது என்று எனக்குத் தெரியும். நான் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும் எனது 6 வயது மகனின் உயிரைக் காப்பாற்ற எனக்கு முக்கியம்.

எனது மகனின் பள்ளியிலிருந்து அவர் மயங்கி விழுந்துவிட்டதாக எனக்கு போன் அழைப்பு வந்த நாள் முதல், நான் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன். அவர் அப்போது சில மாதங்களுக்கு முன்புதான் மூன்று வயதாகி பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தார். நான் அவரை பள்ளியிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அங்கு மருத்துவர்கள் அவருக்கு சில மருந்துகள் கொடுத்தார்கள்.

எனது மனைவி கஜலட்சுமி, எங்கள் மகனை அத்தகைய நிலையில் பார்த்ததால் பயமடைந்தார். நான் அவளை அமைதிப்படுத்தி கவலைப்பட ஒன்றுமில்லை என்று சொன்னேன். ஆனால் நான் தப்பாக நிலைமையை கணித்திருந்தேன். மருந்துகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக, மகனின் உதடுகள் மற்றும் நாக்கு நீல நிறமாக மாறத் தொடங்கின. அவருக்கு மூச்சு விடுவதில் கூட சிக்கல் ஏற்பட்டது.

நாங்கள் பயந்தோம், ஆனால் அவரது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அங்கு எனது மகனுக்கு, பல பரிசோதனைகளை மேற்கொண்டார். மருத்துவமனை நடைபாதையில் எதுவுமே புரியாமல் பல மணி நேரம் காத்திருந்த பிறகு, மருத்துவரின் அறைக்குச் செல்லும்படி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் உள்ளே நுழைந்ததும் டாக்டர் முகத்தில் கவலையை, தோற்றத்தைக் கண்டதும் என் உடல் நடுங்கியது.

"தீபக்கின் இதயத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது, "என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. நான் பேசவே முடியாத நிலையில் இருந்தேன், என்னால் எதையும் செய்ய முடியவில்லை. என் மகன் எப்படி இவ்வளவு கடுமையான நோயால் பாதிக்கப்படுவான்? என்னால் நம்ப முடியவில்லை. மருத்துவ அறிக்கையுடன் நான் பல மருத்துவமனைகளுக்குச் சென்றேன், ஆனால் ஒவ்வொரு மருத்துவரும் அதையே சொன்னார்கள். நாங்கள் சிதைந்துபோனோம். அவரது சிகிச்சையை உடனடியாக தொடங்குமாறு மருத்துவர்கள் சொன்னார்கள். இருப்பினும், மூன்று ஆண்டுகளில், அவரது துன்பங்கள் அதிகரித்தன.

அவரால் சொந்தமாக நடக்க முடியவில்லை. அவர் ஒரு நிமிடம் கூட நடந்தால், அவரது உதடுகளும் நாக்கும் நீல நிறமாக மாறும். மிகச்சிறிய விஷயங்களைச் செய்ய அவர் சிரமப்பட்டார். அவர் தனது படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்கிறார், மணிக்கணக்கில் இடைவிடாமல் அழுவார். கஜலட்சுமி அவரைப் பார்த்து அழுவார். அவரை மிகவும் வேதனையுடன் பார்ப்பது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.

மருந்துகள் ஏன் வேலை செய்யவில்லை என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, எனவே அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவசர ஓப்பன் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் (ரூ .10 லட்சம் செலவாகும்) தீபக்கின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறினர். என் முகத்தில் கண்ணீர் உருண்டு ஓடியது. எந்தவொரு கடின உழைப்பும் எனக்கு இவ்வளவு பெரிய தொகையை பெற்றுத் தராது. இந்த தகவலை சொல்ல, நான் கஜலட்சுமியை நோக்கி நடந்தபோது என் கால்கள் நடுங்கின. அவர் தாங்கமுடியாமல் அழுதார். " தயவுசெய்து நமது மகனைக் காப்பாற்றுங்கள்" என்று என்னிடம் கெஞ்சினார்.

எனது மகனின் சிகிச்சை தொடங்கியதிலிருந்து, எனது சேமிப்புகளையும், எனக்குச் சொந்தமான சிறிய பொருட்களையும் விற்று தீர்ந்துவிட்டேன். நான் எனது நண்பர்களிடமிருந்தும் கடன் வாங்கியிருக்கிறேன், ஆனால் அவர்கள் கூட ஏழைகளாக இருக்கிறார்கள், இவ்வளவு பெரிய தொகையை எனக்குக் கொடுக்க அவர்களாலும், முடியாது. எனக்கு வேறு வழியில்லை. இது எனது மகனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாகும். உங்கள் தயவால் மட்டுமே அவரது வேதனையை சரி செய்ய முடியும். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்.

Click now to Support Deepak

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+