இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா?
டெல்லி: கொரோனா 9 தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படும் போது., கிட்டத்தட்ட ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் முதல் கட்டமாக தடுப்பூசி பெறுவார்கள் என தெரிகிறது. ஏனெனில் அவர்களுக்குத் தான் தடுப்பூசி வழங்குவதில் முதல் முன்னுரிமை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 2வது கட்டமாக கிட்டத்தட்ட இரண்டு கோடி அரசு ஊழியர்கள் காவல்துறை, பாதுகாப்புப் பணியாளர்கள், நகராட்சித் ஊழியர்கள் மற்றும் பிற அத்தியாவசியத் பணியாளர்கள் ) தடுப்பூசி பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
மூன்றாவது கட்டமாக 27 கோடி மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின் போது இந்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், டெல்லி அரசு சுகாதார ஊழியர்களை முன்னுரிமை தடுப்பூசிக்கு சேர்க்கத் தொடங்கியுள்ளதுடன், அனைத்து சுகாதார வசதிகளையும் (நிறுவனங்கள், மருத்துவ இல்லங்கள், OPD கிளினிக்குகள் போன்றவை) தங்கள் ஊழியர்களின் பெயர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் -19 தடுப்பூசிக்கான காத்திருப்பு நீண்ட காலம் இருக்காது. சில வாரங்களில் இது தயாராக இருக்கும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கும்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களை உள்ளடக்கிய முன்னணி ஊழியர்கள், மற்றும் மோசமான நிலைமைகளால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications