மத்திய அரசு முக்கிய முடிவு.. 10,000 துணை ராணுவப் படையினர் காஷ்மீரிலிருந்து வாபஸ்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலிருந்து சுமார் 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பிரிவு 370 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிரிக்கப்பட்டன.

இதை அடுத்து பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு கூடுதலாக துணை ராணுவப் படையினர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் ஓராண்டுக்கு பிறகு, இப்போது முதல்முறையாக பெரிய அளவுக்கு கூடுதல் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) மொத்தம் 40 கம்பெனிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்), எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) மற்றும் சஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி) ஆகியவற்றின் 20 நிறுவனங்களும் இருக்கும் இந்த வாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து வாபஸ் பெறப்படுகிறது.
இதுபற்றி மூத்த சிஏபிஎப் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் இருந்து படைகள் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வருடம் முதல் அவர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஓய்வு தேவைப்படுகிறது. மீண்டும் பயிற்சி தேவைப்படுகிறது. எனவே அவர்கள் திரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கூடுதல் படைகளை குவித்து வைத்துக்கொண்டு குளிர்காலத்தில் பணியாற்றுவது என்பது மேலும் சிரமமான விஷயம் ஆகும். இதுவும் படைகளை வாபஸ் பெறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது.
கூடுதல் படைகளை வாபஸ் பெற்ற பிறகு சுமார் 60 பட்டாலியன் அளவுக்கான சிஆர்பிஎஃப் படைவீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு பட்டாலியன் என்பது சுமார் ஆயிரம் வீரர்கள் கொண்ட குழுவாகும். அப்படியானால் 60 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது தவிர வேறு சில யூனிட் படையினரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications