10 வங்கிகளுக்கு பதிலாக இனி 4 வங்கிதான்.. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.. கேபினெட் ஒப்புதல்
டெல்லி: 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க மத்திய அமைச்சரவை இன்று, ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில், இன்று, நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இணைப்பு திட்டத்தை வங்கிகள் சமர்ப்பித்துள்ளன, அவற்றுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.

ஏப்ரல் 1
இணைப்புக்குப் பிறகும் ஒவ்வொரு வங்கி சேவையும் அப்படியே இருக்கும். மாற்றங்கள் கிடையாது. இந்த இணைப்பு அமல்படுத்தப்படும் தேதி ஏப்ரல் 1 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017இல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இப்போது 18 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இந்த இணைப்பிற்குப் பிறகு 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்.

அதிகரித்த லாபம்
"2019 ஏப்ரல் மாதம், பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியுடன் இணைக்கப்பட்டது. அதில் பலன் கிடைத்ததா என்பதை அரசு கவனித்து வந்தது. சராசரி ரீட்டெய்ல் கடன் அனுமதிக்கும் காலம் 23 நாட்களில் இருந்து 11 நாட்களாக குறைந்துவிட்டது, பாங்க் ஆப் பரோடாவில் செயல்பாட்டு லாபம் 11.4% அதிகரித்துள்ளது," என்று நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

வங்கிகள் இணைப்பு
இதையடுத்துதான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 10 பொதுத்துறை வங்கிகளை இணைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இப்போது இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

4 வங்கிகள்
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. எனவே 10 வங்கிகளாக இருந்த இவை, இனிமேல், நான்கு வங்கிகளாக மட்டுமே செயல்படும். இதனால், பணியாளர்களுக்கோ, அல்லது, வாடிக்கையாளர்களோ எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்று, அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications