10% இடஒதுக்கீட்டிற்கு பதிலடி.. சரியான நேரத்தில் காய் நகர்த்திய ராகுல்.. மினிமம் சேலரி திட்டம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் என்ற வாக்குறுதி தேர்தலில் காங்கிரஸுக்கு பெரிய கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் என்ற வாக்குறுதி தேர்தலில் காங்கிரஸுக்கு பெரிய கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாஜகவின் 10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு பதிலடியாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.
இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு பாஜக மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இடஒதுக்கீடு
பாஜக சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது. வருடம் 8 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறக்கூடிய உயர் சாதியினர் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.

பெரிய பயன்
தேர்தல் நேரத்தில் இது சரியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தேர்தலின் போது உயர் சாதியினர் வாக்குகள் பாஜகவிற்கு அதிக விழும் வாய்ப்புள்ளது. உயர் சாதியினர் இருக்கும் இடங்களில் பாஜக அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தற்போது
இந்த நிலையில்தான் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குறுதி அளித்துள்ளார். இது பாஜகவின் இடஒதுக்கீடு அறிவிப்பை ஈடுகட்டும் என்று கூறுகிறார்கள். அதன்முலம் இழந்த வாக்கை விட அதிக வாக்குகளை காங்கிரஸ் இதன் மூலம் பெரும் என்று கூறுகிறார்கள். இதனால் பலன் பெற போகும் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது.

எப்படி உதாரணம்
இதற்கு உதாரணம் கூறலாம்.
1.ஜாதி ரீதியாக இல்லாமல் ஏழையாக இருக்கும் எல்லோரும் இந்த பணம் கிடைக்கும்.
2.விரக்தியில் இருக்கும் விவசாயிகள் இதனால் பலன் பெறுவார்கள்.
3. வேலை இல்லாத இளைஞர்கள் இதனால் பெரிய பலன் அடைவார்கள்.
4. நடுத்தர வர்க்க மக்கள் இதனால் பயன் அடைவார்கள்.
இவர்கள் நான்கு பிரிவுதான் 90 சதவிகித வாக்காளர்கள். அதனால் இவர்களின் வாக்கு பெரும்பாலும் காங்கிரஸ் வசம் செல்ல வாய்ப்புள்ளது. இந்த தேர்தல் பாஜக vs காங்கிரஸ் என்பதை தாண்டி 10% இடஒதுக்கீடு vs குறைந்தபட்ச வருமானம் என்று மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications