நாட்டிற்காக பணியாற்ற ஆர்வம்... ராணுவத்தில் சேர 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம்
டெல்லி: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 100 சிப்பாய் பணியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கப்பல் படை மற்றும் விமானப் படையில் 13.09 சதவீத பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பிரிவில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ராணுவ சிப்பாய் வேலையில் பெண்களையும் சேர்க்க இந்திய ராணுவம் முடிவு செய்தது.

இதையடுத்து சிப்பாய் பணியில் சேர ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ராணுவத்துக்கு 100 பெண் சிப்பாய்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆர்வம் உள்ள இளம்பெண்கள் ஏப்ரல் 25-ந்தேதி முதல் ஜூன் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், பொது வினாதாள் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து பெண் சிப்பாய் பணியில் சேர நாடு முழுவதும் இளம்பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர். 100 பணியிடங்களுக்கு, 2 லட்சத்துக்கு மேல் இளம்பெண்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
அண்மையில் போர் விமானங்களில் ஆறு பெண் விமானிகள் போர் தாக்குதல் பயிற்சி பெற்றனர். தற்போது 15 லட்சம் ஆண்களைக் கொண்ட ஆயுதப்படையில் பெண்களின் பங்கேற்பும் அதிகரிக்க உள்ளது. இந்த மாத இறுதியில் பெல்காமில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் 100 பெண்களை ராணுவத்தின் காவல் படை பிரிவில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications