Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்யசபாவில் இருந்து 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்- கடந்த கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதால் நடவடிக்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 12 எம்.பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது பெகாசஸ் ஒட்டு கேட்பு, விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவைகளை முன்வைத்து இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற இரு சபைகளும் முடக்கப்பட்டன.

ராஜ்யசபாவில் அமளி

ராஜ்யசபாவில் அமளி

ராஜ்யசபாவில் அமைச்சர்களின் பதிலுரை அறிக்கைகளை கிழித்து எறிந்தும் எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் தொடர் அமளியில் ஈடுபடும் எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 விவசாய சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்

விவசாய சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூடியது. இன்றும் லோக்சபா, ராஜ்யசபாவில் கடுமையான அமளி நிலவியது. இந்த அமளிகளுக்கு நடுவே மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா, இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பிற்பகலுக்குப் பின்னர் லோக்சபா நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

மேலும் ராஜ்யசபாவில் விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின் 2 முறை சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன. இதன் பின்னர் மாலை 3.09 க்குப் பின் கூடிய ராஜ்யசபாவில், கடந்த கூட்டத் தொடரில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபையை நடத்திய ராஜ்யசபா துணைத் தலைவர் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

 சஸ்பெண்ட் எம்.பிக்கள்

சஸ்பெண்ட் எம்.பிக்கள்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்: இளமாறம் கரீம் (சிபிஎம்), பூலோ தேவி நீதம், சஹாய வர்மா, போரா, ராஜாமணி படேல், சையத் நசீர் ஹூசைன், அகிலேஷ் பிரசாத் சிங் (காங்கிரஸ்), பினோய் விஸ்வம் (சிபிஐ), தோலா சென், சாந்தா சேத்ரி (திரிணாமுல் காங்கிரஸ்), அனில் தேசாய்- சிவசேனா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரமும் வரும் நாட்களில் லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளிலும் கடுமையாக எதிரொலிக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+