கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.. பிரதமர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா முழுவதும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

15000 cr allocated for upgrading medical facilities to fight corona- Modi

இதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுடன் இணைந்து மக்கள் செயல்பட்டால்தான் கொரோனா பாதிப்பை 100 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

மூடநம்பிக்கை, வதந்திகளை நம்பாதீர்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ வசதிகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிதியானது கொரோனா சோதனை வசதிகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள், ஐசியுக்கள், செயற்கை சுவாசங்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி ஆகியவற்றுக்காக செலவிடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+