ஒன்றல்ல.. இரண்டல்ல.. 20 லட்சம் இவிஎம்களை காணவில்லை.. தொடரும் புதிர்.. முடிவிற்கு வராத கேள்விகள்!
20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாக பரபரப்பு புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாக பரபரப்பு புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாக இந்த எந்திரங்கள் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
லோக்சபா தேர்தல் கடைசியில் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் மாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நிறைய அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகி உள்ளது.

எப்படி வாங்கும்
பொதுவாக இந்திய தேர்தல் ஆணையம் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாங்குகிறது. ஹைதராபாத்தில் இருக்கும் இசிஐஎல் மற்றும் பெங்களூரில் உள்ள பிஇஎல் நிறுவனம் இரண்டில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் வாங்குகிறது. 1990ல் இருந்து இப்படி வாங்கப்படுகிறது.

எவ்வளவு எந்திரங்களை வாங்கியது
இந்த நிலையில், 1990-2015 வரை வாங்கப்பட்ட எந்திரங்கள் 20.20 லட்சம் மட்டுமே. இசிஐஎல் நிறுவனத்திடம் இருந்து 10,05,662, பிஇஎல் நிறுவனத்திடம் இருந்து 10,14,644 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது, மனோரஞ்சன் ராய் என்ற மும்பையை சேர்ந்த நபர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் என்ன
ஆனால் இதே கேள்விக்கு இசிஐஎல் மற்றும் பிஇஎல் நிறுவனம் இரண்டு வேறு மாதிரி பதில் அளித்துள்ளது, அதன்படி இசிஐஎல் நிறுவனம் 19 லட்சம் மற்றும் பிஇஎல் நிறுவனம் 20 லட்சம் மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை விற்பனை செய்ததாக கூறியுள்ளது. அதாவது மொத்தம் 40 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் விற்கப்பட்டு உள்ளது.

வழக்கு நடக்கிறது
மீதமுள்ள 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எங்கே போனது என்ற கதை யாருக்கும் தெரியவில்லை, இந்த எந்திரங்கள் எங்கே இருக்கிறது. யார் இதை வைத்து இருக்கிறார்கள் என்று விவரம் இன்னும் புதிராக உள்ளது. இது தொடர்பாக சென்ற வருடம் வழக்கு தொடுக்கப்பட்டு அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

சர்ச்சை எழுந்துள்ளது
இந்த 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் தற்போது கொண்டு வரப்பட்டு இருக்கிறதா, இதை வைத்துதான் முறைகேடு நடக்கிறதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது. ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை. இந்த 20 லட்சம் எந்திரங்கள் எங்கே போனது என்பதே தற்போது புரியாத புதிராக இருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications