இழந்ததை மீட்க திட்டம்.. பாஜகவில் மீண்டும் பார்முக்கு வருகிறார் அத்வானி.. மோடி அப்செட்!
பாஜக கட்சியில் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி: பாஜக கட்சியில் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீண்டும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது பாஜக. இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக சில முக்கிய தலைவர்களை பாஜக மீண்டும் கட்சிக்குள் ''பார்மிற்குள்'' கொண்டு வர முடிவெடுத்து உள்ளது.

மோடி அமித் ஷா என்ன செய்தார்?
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜகவில் முன்னணி தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். முக்கியமாக அதிக வயது கொண்ட அனுபவம் கொண்ட தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டார்கள். அத்வானியை பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் சரியாக கண்டுகொள்ளவில்லை, மரியாதை அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

பாஜக பின்னடைவு
இந்த நிலையில் 2014 தேர்தலுக்கு பின் நடந்த எந்த தேர்தலிலும் பாஜக சரியாக செயலாற்றவில்லை. முக்கியமாக மாநில தேர்தல்கள், இடைத்தேர்தல்களில் பாஜக மிக மோசமான தோல்வியை தழுவியது. கடைசியாக நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜக மிக மோசமான தோல்வியை தழுவியது. இதனால் தற்போது பாஜக பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

அத்வானி வருகிறார்
இந்த நிலையில்தான் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி மீண்டும் பாஜகவில் ஆக்ட்டிவாக இருக்க போகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவருக்கு 91 வயது ஆகிறது. ஆனாலும் இவர் பாஜகவின் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்வார் என்று கூறுகிறார்கள். மற்ற தலைவர்களை விட இவருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

தேர்தலில் நிற்கிறார்
அதேபோல் இவர் தேர்தலில் நிற்க போகிறார் என்றும் கூறுகிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் இவர் பாஜக சார்பாக போட்டியிடுவார் என்று கூறுகிறார்கள். அதேபோல் பாஜகவில் ஓரம்கட்டப்பட்ட சில மூத்த தலைவர்களும் கட்சிக்குள் வருவார் என்று கூறுகிறார்கள். பாஜக மீண்டும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்காக இப்படி செய்வதாக கூறப்பட்டுள்ளது.

என்ன நடக்கிறது
பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவிற்கும் இந்த முடிவில் பெரிய திருப்தி இல்லை என்று கூறுகிறார்கள். ஏற்கனவே பாஜகவின் மோடிக்கு பதில் நிதின் கட்கரி முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த சமயத்தில் பாஜகவில் அடுத்தடுத்த மாற்றம் நிகழ்வது பல அரசியல் கேள்விகளை எழுப்பி உள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications