ஜெய்ஹிந்த்.. குடியரசுத் தலைவர் விருது...தமிழகத்திலிருந்து 23 போலீசார் தேர்வு!!
டெல்லி: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. நடப்பாண்டுக்கான விருதுக்கு தமிழகத்தில் இருந்து 2 போலீஸ் அதிகாரிகள் ஜனாதிபதி போலீஸ் விருதுக்கும், 21 போலீசார் சிறந்த போலீஸ் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
நடப்பு 2020 ஆண்டுக்கான சுதந்திர தினத்தை முன்னிட்டு விருது பெறும் போலீசாரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. துணிச்சலான போலீசார் என்ற அடிப்படையில் 215 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 80 பேர் போலீஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 631 சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கத்திற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இந்த விருதை அந்தந்த மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று வழங்குவார்கள். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக இந்த விருதுக்கு 73 பேரும், மகாராஷ்டிராவில் 39 பேரும், தமிழகத்தில் 21 பேரும், மேற்குவங்கத்தில் 20 பேரும், கேரளாவில் 6 பேரும், கர்நாடகாவில் 18 பேரும், தெலங்கானாவில் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.















Click it and Unblock the Notifications