இன்று 3 லோக்சபா, 29 சட்டசபை இடைத் தேர்தல்கள்.. பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி
டெல்லி: மக்களவையின் 3 தொகுதிகளுக்கும் மாநில சட்டசபையின் 29 தொகுதிகளுக்கும் இன்றைய தினம் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இந்த தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் கடும் போட்டா போட்டியில் உள்ளன. இந்த தேர்தலில் 3 மக்களவை தொகுதி உறுப்பினர்கள் மரணமடைந்ததால் இன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அது போல் 13 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் பெரும்பாலான தொகுதி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மற்றும் தாத்ரா- நாகர்ஹவேலி ஆகிய 3 எம்பி தொகுதிகளின் எம்பிக்களான ராம்ஸ்வரூப் சர்மா (மாண்டி), நந்த் குமார் சிங் சவுகான் (காண்ட்வா) ஆகியோர் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டனர். இருவரும் பாஜக எம்பிக்கள் ஆவார். தாத்ரா -நாகர் ஹவேலியின் எம்பியாக இருந்த மோகன் தேல்கர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இவர் சுயேச்சை எம்பியாவார்.
இந்த மூவரின் இறப்பால் இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இந்த தொகுதிகளுக்கு இன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அது போல் மேற்கு வங்கத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 5 சட்டசபை தொகுதிகளான கோசைகான், பவானிபூர் உள்ளிட்டவைகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கோசைகான் மற்றும் தமமுல்பூர் தொகுதியின் எம்எல்ஏக்கள் இறந்துவிட்டனர். மற்ற 3 தொகுதியின் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துவிட்டனர். பவானிப்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த பானிதார் தலுக்தார் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். தற்போது அதே தொகுதி இடைத்தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
காண்ட்வா மக்களவை தொகுதியுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் மேலும் 3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அவை ராய்கான், ஜோபாட் மற்றும் பிரித்விபூர் ஆகியவை ஆகும். இதில் ராய்கான் தொகுதி பாஜக வென்றது, மற்ற இரு தொகுதிகள் காங்கிரஸ் வென்றது. அதுபோல் தெலுங்கானாவின் ஹுசுராபாத் மற்றும் ஆந்திராவின் பாத்வெல்லில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஹுசுராபாத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வென்றது.
அது போல் கர்நாடகாவில் ஹனாகல் மற்றும் சிண்ட்கி தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. கர்நாடகா மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றதன் பிறகு நடத்தப்படும் முதல் தேர்தலாகும். மேகாகலா, ஹிமாச்சல் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மிசோரம், ஹரியானா ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான விறுவிறுப்பான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தந்த மாநில பிரச்சினைகளுக்கு மத்தியில் எந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications