எதிர்ப்புகள் எதிரொலி- நாடாளுமன்றத்தில் 30 நிமிடம் மட்டும் கேள்வி நேரத்துக்கு அனுமதி
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளால் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 30 நிமிட நேரத்துக்கு மட்டும் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தற்போது வரும் 14-ந் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களும் இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அத்துடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது; அடிப்படை ஜனநாயக அரசியலுக்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 30 நிமிடம் நேரம் மட்டுமே கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அமைச்சர்களிடம் இருந்து துறை சார்ந்த நேரடி கேள்வி பதில் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பதில்களைப் பெறக் கூடிய கேள்விகளுக்குதான் நடப்பு கூட்டத் தொடரில் அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications