எதிர்ப்புகள் எதிரொலி- நாடாளுமன்றத்தில் 30 நிமிடம் மட்டும் கேள்வி நேரத்துக்கு அனுமதி
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளால் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 30 நிமிட நேரத்துக்கு மட்டும் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தற்போது வரும் 14-ந் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களும் இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அத்துடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது; அடிப்படை ஜனநாயக அரசியலுக்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 30 நிமிடம் நேரம் மட்டுமே கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அமைச்சர்களிடம் இருந்து துறை சார்ந்த நேரடி கேள்வி பதில் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பதில்களைப் பெறக் கூடிய கேள்விகளுக்குதான் நடப்பு கூட்டத் தொடரில் அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications