குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் இல்லை! உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் உருக்கம்
டெல்லி: உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 30 தமிழர்களும் நேற்று டெல்லி திரும்பிய நிலையில் அவர்கள் பட்ட கஷ்டத்தை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அதாவது நிலச்சரிவால் எங்கும் செல்ல முடியாமல் 8 நாட்களாக குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களை 4 மணி நேரத்தில் மீட்ட தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த வசந்தா (58), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), விஜயலட்சுமி (62), வாசுகி (60), குமாரி (61), பராசக்தி (75) உள்ளிட்ட 17 பெண்கள் உள்பட 30 பக்தர்கள், கடந்த 1ம் தேதி ஆன்மிக சுற்றுலா பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சாலை மார்க்கமாக சென்றனர்.

ஆதி கைலாஷ் கோயிலுக்கு செல்வதற்கு முன்பே உத்தரகாண்ட் நகரத்தில் உள்ள பல்வேறு கோயிலுக்கு சென்றனர். உத்தகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்குள்ள ஒரு மடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆதி கைலாஷ் கோயிலுக்கு வேனில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மீண்டும் டெல்லி திரும்ப முடிவு செய்தனர்.
நேற்று முன் தினத்திற்கு முன் தினம் பித்தோரகர் மாவட்டம் அருகே சென்ற போது ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவல் உள்ள தவாகாட் தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவாகாட் பகுதியில் வந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 30 பக்தர்கள் அதே இடத்திலேயே சிக்கித் தவித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி சிதம்பரத்தில் உள்ள உறவினர்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றும்படி கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிதம்பரம் மாவட்ட ஆட்சியர், பித்தோரகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அவர்களை பாதுகாப்பாக வைக்கும் படி கூறினார்.
இதையடுத்து உத்தரகாண்ட் போலீஸாரும் பேரிடர் மீட்பு படையினரும் அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். நேற்று முன் தினம் மழை விட்டதை அடுத்து தாவாகாட் கிராமத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தொடர்ந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள டார்சுலாவுக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
டார்சுலாவில் இருந்து 30 பேரும் நேற்று டெல்லிக்கு வேனில் புறப்பட்டனர். இதையடுத்து இன்றைய தினம் விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லிச் செல்லும் வழியில் நிலச்சரிவில் இருந்து மீண்டவர்கள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆதிகைலாஷ் யாத்திரை மறக்க முடியாத பயணமாக அமைந்துவிட்டது. 8 நாட்களாக சரியான இருப்பிடமும் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம்.
செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தோம். உறவினர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக தமிழக அரசை தொடர்பு கொண்டோம். நாங்கள் தகவல் சொல்லிய 4 மணி நேரத்திற்குள் எங்களை பத்திரமாக மீட்டனர்.
ஹெலிகாப்டர் மூலம் நாங்கள் வந்து சேர்ந்தோம். நேற்று முன் தினம் இரவு பித்தோரகர் எனும் இடத்தில் தங்கினோம். பிறகு தற்போது டெல்லிக்கு இரு வாகனங்களில் சென்றுவருகிறோம். 8 நாட்களை தாண்டி நாட்கள் சென்றுவிட்டதால் கையில் இருந்த பணமும் கரைந்து விட்டது. டெல்லியிலிருந்து சென்னை வருவதற்கும் அங்கிருந்து எங்கள் சொந்த ஊரான சிதம்பரத்தை அடைவதற்கும் முதல்வர் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications