இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு.. குற்றஞ்சாட்டப்பட்ட லடாக் மாணவர்கள் 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்!
டெல்லி: இஸ்ரேல் தூதரகம் அருகே கடந்த ஜனவரியில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 லடாக் மாணவர்கள் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி ஹைகோர்ட் இவர்களுக்கு பெயில் வழங்கியது.
கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்தது. சிறிய அளவிலான ஐஇடி வகை குண்டு வெடித்தது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் இந்த குண்டுவெடிப்பில் சேதம் அடைந்தன.

இந்த குண்டு வெடிப்பில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் டெல்லி போலீசார் 4 லடாக் மாணவர்களை கைது செய்தனர். டெல்லியில் தங்கி படித்து வந்ததாக குற்றஞ்சாட்டப்ப 4 லடாக் மாணவர்கள் இந்த தாக்குதலில் தொடர்பு உடையவர்கள் என்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிரான வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த 4 லடாக் மாணவர்களும் பெயிலில் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி ஹைகோர்ட் இவர்களுக்கு பெயில் வழங்கியது. இவர்கள் குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இவர்கள் குண்டு வைத்ததற்கான ஆதாரம் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என்று டெல்லி ஹைகோர்ட் கூறியுள்ளது. எல்லோரும் 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பெயில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட நாஸிர் ஹுசைன், ஜுல்பிகர் அலி வாசிர், அய்யாஸ் ஹுசைன், முஸம்மில் ஹுசைன் ஆகியோர் பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு வாதத்தின்போது, நான்கு போரில் ஜுல்பிகர் அலி வாசிர், அய்யாஸ் ஹுசைன், முஸம்மில் ஹுசைன் மூவரும் டெல்லிக்கு படிக்க வந்தவர்கள் என்றும், நாஸிர் ஹுசைன் டெல்லி பக்கமே கடந்த ஒன்றரை வருடமாக வரவில்லை என்றும் வாதம் வைக்கப்பட்டது. மாணவர்கள் தரப்பு வாதத்தை டெல்லி ஹைகோர்ட் மேஜிஸ்டிரேட் பங்கஜ் சர்மா ஏற்றுக்கொண்டார்.
இவர்கள் 4 பேருக்கு எதிராக போலீஸ் எந்த ஆதாரத்தையும் பதிவு.செய்யவில்லை . இவர்கள் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்பிலும் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இவர்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி ஹைகோர்ட் இந்த வழக்கில் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications