நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்! டெல்லி எய்ம்ஸ் மாணவர்கள் 4 பேர் கைது! வசமாய் சிக்கிய கும்பல்! ஷாக் தகவல்
டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த டெல்லி எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் 4 பேரை அதிரடியாக டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மருத்துவம் பயில நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நீட் தேர்வில் தேர்ச்சி அடைவது சிலருக்கு கடினமாக உள்ளது. இதனால் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில் தான் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நரேஷ் பிஷ்ரோய், முதலாமாண்டு மாணவர் சஞ்சு யாதவ், மகாவீர் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நரேஷ் பிஷ்ரோய் மற்றும் சஞ்சு யாதவ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாவீர், ஜிதேந்திரா ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீட் தேர்வுக்கான இந்த ஆள்மாறாட்ட கும்பல் நரேஷ் பிஷ்ரோய் தலைமையில் செயல்பட்டு வந்துள்ளது. இவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பதிலாக முதலாமாண்டு பயிலும் மாணவர்களை தேர்வில் பங்கேற்க வைத்து ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.
இதற்காக இந்த கும்பல் ஒருவரிடம் இருந்து ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இத்தகைய மோசடியில் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் இவர்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைதானவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்த கும்பல் எத்தனை பேருக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்தது. இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications