டெல்லி திகார் சிறைக்கே சென்று சுகேஷை சந்தித்த 4 பாலிவுட் நடிகைகள்.. விசாரணை அதிர்ச்சி தகவல்
டெல்லி: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை 4 பாலிவுட் நடிகைகள் சந்தித்ததாக புது தகவல் கிடைத்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை தினகரனுக்கு பெற்று தர தேர்தல் ஆணையத்திடம் லஞ்சம் கொடுப்பதாக பணமோசடி செய்த வழக்கில் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறையில் இருந்தபடியே தனது மனைவி நடிகை லீனாவை வைத்து மருந்து நிறுவனங்களின் மனைவிகளிடம் அவர்களது கணவர்களை வழக்கிலிருந்து வெளியே எடுப்பதாக கூறி ரூ 200 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

லீனா
இந்த மோசடி தொடர்பாக சுகேஷ், மனைவி லீனா, அவரது உதவியாளர் பிங்கி இரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்து பறித்த பணத்தில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோராா பதேஹி ஆகியோருக்கு கோடிக்கணக்கில் பரிசு பொருள்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்தது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.

அமலாக்கத் துறை
இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் அண்மையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். நடிகை நேராவை அழைத்து 7 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் ஜாக்குலினிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜாக்குலினுடன் நெருக்கம்
அது போல் ஜாக்குலினை சுகேஷுக்கு அறிமுகம் செய்து வைத்த பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையில் மேலும் பாலிவுட் நடிகைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளந. நிகிதா தம்போலி, சாகத் கன்னா, சோபியா சிங், அருஷா பாட்டீல் ஆகிய 4 நடிகைகளும் சிறைக்கு சென்று சுகேஷை பார்த்துள்ளனராம்.

பிங்கி இரானி
அவரிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்களையும் பெற்றதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் பிங்கி இரானி. இந்த 4 பேரிடமும் சுகேஷ் குறித்து பிங்கி இரானி ஒவ்வொரு விதமாக சொல்லியுள்ளாராம். நிகிதா தம்போலியிடம் தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர் என்றும் அவரது பெயர் சேகர் என்றும் கூறியிருந்திருக்கிறார்.

எத்தனை கோடி
அது போல் சோபியா சிங்கிடம் சேகர் ரெட்டி என்ரும் சினிமா பட தயாரிப்பாளர் என்றும் பிங்கி , சுகேஷை அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகை நிகிதா, சுகேஷை சந்திக்க ஏற்பாடு செய்ததற்கு பிங்கிக்கு ரூ10 லட்சம் கொடுக்கப்பட்டது. இந்த 10 லட்சத்தில் ரூ 1.5 லட்சம் நிகிதாவுக்கு கொடுக்கப்பட்டது. நிகிதா 2018-ஆம் ஆண்டு சுகேஷை சந்தித்தார். அத்துடன் அவர்கள் சந்திக்கவே இல்லை. இவர்கள் எல்லாம் சிறையில் சென்று சந்தித்தவுடன் அந்த நடிகைகளின் வங்கிக் கணக்குகளில் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications