பெண்களுக்கு சமஊதியம் - கூடுதல் பணிக்கு இரட்டை சம்பளம்.. அமலான 4 தொழிலாளர் சட்டம் பற்றி மோடி பெருமை
டெல்லி: நம் நாட்டில் நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து சீர்த்திருத்தம் செய்து புதிய 4 தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமஊதியம் வழங்குவது, கூடுதல் பணிக்கு இரட்டை சம்பளம் வழங்குவது உள்பட பல்வேறு பலன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்க உள்ளது. இந்நிலையில் தான் இந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி பிரதமர் மோடி பெருமையாக போட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.
நம் நாட்டில் புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை (New Labour Code) மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த சட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 உள்ளிட்டவை தான் அந்த புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளாகும்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு சட்டங்களாக மாற்றி கொண்டு வரப்பட்டுள்து. தொழிலாளர் நலன் சார்ந்த விதிகளை மேம்படுத்தி தொழிலாளர்களை பாதுகாப்பது, பணியிட சூழலில் அவர்களுக்கு சீரமைப்பை கொண்டு வருவது, பணிப்பாதுகாப்பை கொண்டு வருவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி தொழிலாளர்களுக்கு பணி நியமனம் கடிதம் வழங்குவது, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் வழங்குவது, தொழிலாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐசி வழங்குவது உள்ளிட்டவற்றை இந்த சட்டங்கள் உறுதி செய்ய உள்ளனர். இது தொடர்பாக, பிரதமர் மோடி பெருமைப்படி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛ஷ்ரமேவ் ஜெயதே, இன்று நம் அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. இது சுதந்திரத்துக்கு பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் நன் சார்ந்த சீர்த்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரியளவில் அதிகாரம் அளிக்கிறது. இது விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்கும். அதே வேளையில், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும்.
இந்த சட்டம் என்பது தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு, சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதல், பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்குவது மட்டுமின்றி பெண்கள் மற்றும் இளைஞர்களின் சக்திகளுக்கு ஏற்ப ஊதியம் வழங்க வாய்ப்பு வழங்குகிறது.
இது தொழிலாளர்களின் உரிமைகளை பகாதுகாப்பதோடு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் எதிர்காலத்துக்கு தயாரான சூழலைஉருவாக்கும். இந்த சீர்த்திருத்தங்கள் என்பது வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்'' என கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications