மம்தாவுக்கு தொடரும் அடி... திரிணாமுல் காங். மூத்த தலைவர்கள் 5 பேர் பாஜகவில் ஐக்கியம்!
டெல்லி: திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் ராஜீப் பானர்ஜி, வைஷாலி டால்மியா உள்பட 5 பேர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைவது மம்தாவுக்கு பலத்த அடியை கொடுத்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் எப்படியவாது ஆட்சியை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வருகிறது.
பாஜகவின் ஆசை
மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருகிறது. எப்படியவாது ஆட்சியை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வருகிறது.
அடுத்தடுத்து விலகல்
இதற்காக அமித்ஷா பல வியூகத்தை வகுத்து வருகிறார். அவர் வகுக்கும் வியூகம் நன்கு செயல்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து, பாஜவில் இணைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள அரசில் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜீப் பானர்ஜி பதவியை ராஜினாமா செய்தார். நேற்று சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லிக்கு சென்றனர்
இதேபோல் திரிணாமுல் காங்கிரசில் பெண் எம்.எல்.ஏ.வான வைஷாலி டால்மியா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனால் ராஜீப் பானர்ஜி, வைஷாலி டால்மியா பாஜகவில் இணைவார்கள் என்று தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய ராஜீப் பானர்ஜி, வைஷாலி டால்மியா உள்பட 5 பேர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
|
பாஜகவில் இணைந்தனர்
திட்டமிட்டபடி டெல்லி பாஜக அலுவலகத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசிய ராஜீப் பானர்ஜி, வைஷாலி டால்மியா, ருத்ரானில், ரதின் சக்ரவர்த்தி, மற்றும் பிரபி கோஷல் ஆகிய 5 பேர் பாஜகவில் இணைந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைவது மம்தாவுக்கு பலத்த அடியை கொடுத்து வருகிறது.