எல்லாத்துக்கும் அவர்தான் காரணம்.. காங்கிரஸ் வெற்றிக்கு சோனியா, ராகுலின் ரியாக்சன் என்ன தெரியுமா?
5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.
Recommended Video
டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தால் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றது.
5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பெரும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்று இருக்கிறது. ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் தோல்வி உறுதியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனாலும் பாஜக இந்த தோல்வியையும், காங்கிரசின் பெரும் எழுச்சியையும் எதிர்பார்க்கவில்லை.
நாடு முழுக்க கொண்டாட்டம்
தற்போது இந்த வெற்றி காரணமாக நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநில தலைமையங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களும் அதீத மகிழ்ச்சியில் உள்ளனர்.
சோனியா காந்தி
இதுகுறித்து சோனியா காந்தி காங்கிரஸ் உறுப்பினர்களிடம் பேசியது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில், இப்போது வெற்றியை கொண்டாட வேண்டாம். தேர்தல் முடிவுகள் முழுதாக வெளியாகும் வரை காத்திருங்கள். கடைசியாக கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.
அவர்தான் எல்லாம்
அதேபோல் இந்த வெற்றிக்கு ராகுல்தான் காரணம். அவர்தான் கடினமாக உழைத்தது. அவரின் உழைப்பிற்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பிற்கும் பெரிய பலன் கிடைத்து இருக்கிறது. அவர்களைத்தான் பாராட்ட வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
ராகுல் தொண்டர்கள் நன்றி
அதே நிலையில் ராகுல் இதுகுறித்து பெரிய அளவில் பெருமைபடாமல் அனைத்து வெற்றிக்கும் தொண்டர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார் . நிர்வாகிகளிடம் பேசிய ராகுல் காந்தி, தொண்டர்களால்தான் இந்த பெரிய வெற்றி சாத்தியமாகி உள்ளது. அவர்களுக்கு என் நன்றி என்று கூறியுள்ளார்.