நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க உத்தரவு.. பிரதமர் அலுவலகம் அசத்தல்
டெல்லி: நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிஎம் கேர்ஸ்-இல் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக மோசமாக உள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு 3.49 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா நோயாளிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்குச் சரிவர சுவாசிக்க ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது.
இதனால் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை திடீரென பல மடங்கு அதிகரித்துது. தேவைக்கு ஏற்றபடி உற்பத்தி இல்லாததால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் நிலையும், சில இடங்களில் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில், நிலைமையைச் சமாளிக்க நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப் பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான நிதி பிஎம் கேர்ஸ்-இல் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுச் சுகாதார மையங்களில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் இது அம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க உதவும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications