வெறும் 6 அடி இடைவெளி மட்டுமே போதாது.. வைரஸ் பரவலை அது தடுக்குமா?.. ஆய்வில் புது தகவல்
சீனாவில் மீண்டும் தொற்று வேகமாக பரவி வருகிறதாம்
டெல்லி: கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் எத்தகைய தன்மை வாய்ந்தது, வீரியமிக்கது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்...
ஆனால், அதற்குள் இந்த வைரஸ் பல்வேறு வடிவங்களை பெற்று பரவிவருகிறது... எனினும் மருத்துவர்களின் ஆய்வுகள் தினம் தினம் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

போலீஸ்
கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே, அனைவரும் மாஸ்க் போட வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.. இதைதான் உலக மக்களும் கடைப்பிடித்து வருகிறார்கள்... அப்படி கடைப்பிடிக்காதவர்களை போலீசாரும் கண்காணித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

ஆய்வு
ஆரம்பத்தில் இருந்தே, 2 பேருக்கு நடுவில் 2 மீட்டர் இடைவெளி அதாவது ஆறரை அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.. ஆனால், இந்த அளவு போதாது என்று தற்போது தெரியவந்துள்ளது.. இது தொடர்பாகதான் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.. காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை, திரவத்துளி உமிழ்வு முறை போன்ற 3 காரணிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகளையும் தற்போது வெளியிட்டுள்ளனர்..!

காற்றோட்டம்
அதன்படி, மூடப்பட்ட ரூம்களில் காற்றில் மிதந்து வரும் வைரசில் இருந்து பாதுகாக்க, 2 நபர்களுக்கு இடையிலான 2 மீட்டர் இடைவெளி போதுமானதாக இருக்காது என்கிறார்கள்.. மேலும், ஒருவரிடம் இருந்து வெளியேற்றப்பட்ட வைரஸ் உள்ள திரவத்துளிகள், இன்னொருவருக்கு பரவுவதை தடுக்க, தனிமனித இடைவெளி மட்டும் போதாது.. மூக்கு மற்றும் வாயை முறையாக மறைக்க வேண்டும், போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ஆய்வு
சமீப காலமாகவே, 6 அடியை தாண்டியும் வைரஸால் பரவமுடியும் என்று பல சான்றுகளை ஆராய்ச்சி வல்லுநர்கள் சிலர் வெளியிட்டு வந்தனர்.. மேலும் இந்த தூரத்தை மறுமதிப்பீடும் செய்து வந்தனர்.. இடைவெளியை கடைபிடிக்க 6 அடி ஒரு தொடக்கமாக அமைந்தாலும், மோசமான காற்றோட்டம் உள்ள பகுதிகளில் இடைவெளி கட்டாயம் அவசியம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

நிபுணர்கள்
அதுமட்டுமல்ல, காற்று சுழற்சி, காற்றோட்டம், கூட்டத்தின் அடர்த்தி, மக்கள் முகமூடி அணிந்திருக்கிறார்களா, அவர்கள் அமைதியாக இருக்கிறார்களா, பேசுவது, கூச்சலிடுவது அல்லது பாடுவது போன்ற பல காரணிகளைக் கருத்தில்கொள்வது இந்த 6 அடி போதுமானதா என்பதை மதிப்பிடுவதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications