சென்னை: எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழகம் வந்தபோது மகாத்மா காந்தி மேலாடையை துறந்த நிகழ்வின் நினைவாக சிலை திறக்கப்பட்டுள்ளது. இது இன்று முதலே மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது.
நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் அடிப்படையில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது நாட்டின் சுதந்திர தின விழா தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்
Aug 15, 2022, 10:17 am IST
எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
Aug 15, 2022, 10:17 am IST
எழும்பூர் அருக்ங்காட்சிய வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
Aug 15, 2022, 10:16 am IST
காந்தி தமிழகம் வந்தபோது மேலாடையை துறந்த நிகழ்வின் நினைவாக சிலை திறக்கப்பட்டுள்ளது
Aug 15, 2022, 9:55 am IST
குளத்தில் மூழ்கிய சிறார்களை காப்பாற்றியதற்காக எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கபட்டது
Aug 15, 2022, 9:55 am IST
முதலமைச்சரின் சிறந்த இளைஞர் விருது ஸ்ரீகாந்த், விஜயகுமார், முகமது ஆசிக், சிவரஞ்சனிக்கு வழங்கப்பட்டது
Aug 15, 2022, 9:50 am IST
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டு
Aug 15, 2022, 9:50 am IST
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது
Aug 15, 2022, 9:50 am IST
தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசிக்கு விருது வழங்கப்பட்டது
Aug 15, 2022, 9:46 am IST
சுதந்திர தினத்தையொட்டி 2022ம் ஆண்டுக்கான நல்லாளுமை விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Aug 15, 2022, 9:46 am IST
காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2022, 9:39 am IST
தகைசால் விருதுடன் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தோடு சேர்த்து ரூ.5 ஆயிரத்தையும் தமிழக அரசுக்கு வழங்கினார் நல்லகண்ணு
Aug 15, 2022, 9:36 am IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது
Aug 15, 2022, 9:36 am IST
ஏபிஜே அப்துல் கலாம் விருது முனைவர் இஞ்ஞாசிமுத்துவுக்கு வழங்கப்பட்டது
Aug 15, 2022, 9:36 am IST
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் இன்னாசிமுத்துவுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2022, 9:35 am IST
தேசியக் கொடியின் நிறம் மூன்றாக இருந்தாலும், அவை ஒரே அளவில் இணைந்து காணப்படுகிறது
Aug 15, 2022, 9:34 am IST
பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் இணைந்து வாழ்வதே இந்தியாவைக் காக்கும்: முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2022, 9:34 am IST
அனைத்து மக்களின் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2022, 9:33 am IST
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் உயர்ந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2022, 9:32 am IST
ஒவ்வொருவரின் கோரிக்கையையும் நிறைவேற்றும் முதல்வராக இருக்க ஆசை: ஸ்டாலின்
Aug 15, 2022, 9:30 am IST
விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம்
Aug 15, 2022, 9:29 am IST
வளர்ச்சி என்பது இதன் அடிப்படையில் கொண்டதாக இருக்க திட்டமிட்டு செயல்படுகிறோம்: முதல்வர்
Aug 15, 2022, 9:29 am IST
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக இல்லாமல், சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Aug 15, 2022, 9:28 am IST
கடந்த ஓராண்டில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி, பல்துறை வளர்ச்சியாக இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2022, 9:24 am IST
சென்னையில் நவீன தொழில்நுட்பத்துடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்
Aug 15, 2022, 9:24 am IST
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக வந்தவரை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழகம் தான்: ஸ்டாலின்
Aug 15, 2022, 9:21 am IST
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி அறிவிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2022, 9:21 am IST
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.20,000-ஆக அதிகரிப்பு
Aug 15, 2022, 9:21 am IST
தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.10,000 உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
Aug 15, 2022, 9:20 am IST
கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,000 ஆக உயர்வு
Aug 15, 2022, 9:18 am IST
விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்: முதல்வர் ஸ்டாலின்
READ MORE
5:47 PM, 14 Aug
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை
5:47 PM, 14 Aug
தூர்தர்ஷனில் திரவுபதி முர்முவின் உரை ஒளிபரப்பு
5:48 PM, 14 Aug
தூர்தர்ஷனில், ஹிந்தி மற்றும் ஆங்கில ஒலிபரப்புகளைத் தொடர்ந்து, மண்டல அலைவரிசைகளில் அந்தந்த பிராந்திய மொழிபெயர்ப்பும் இடம்பெறும்
5:48 PM, 14 Aug
அகில இந்திய வானொலியின், பிராந்திய அலைவரிசைகளில் அந்தந்த பிராந்திய மொழி ஒலிபரப்பு இரவு மணி 9.30-க்கு இடம்பெறும்.
7:08 PM, 14 Aug
75வது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை
7:08 PM, 14 Aug
நாட்டிற்காக தியாகம் செய்த அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களையும் நான் நினைவு கூறுகிறேன் - ஜனாதிபதி
7:09 PM, 14 Aug
இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாற்றுவதி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் - ஜனாதிபதி
7:10 PM, 14 Aug
நமது மூவர்ண தேசியக்கொடி நாட்டின் ஒவ்வொரு வீடுகளில் பறந்து வருகிறது - ஜனாதிபதி
7:11 PM, 14 Aug
இந்தியாவின் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சொத்து - ஜனாதிபதி
7:17 PM, 14 Aug
இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்பட்டு வருகிறது - ஜனாதிபதி
7:18 PM, 14 Aug
நாட்டின் பெருமைமிகு அடையாளமாக பழங்குடி மக்கள் மாறியுள்ளனர் - ஜனாதிபதி
7:21 PM, 14 Aug
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் பிராந்திய வீரர்களாக மட்டுமின்றி நாட்டின் அடையாளமாக உள்ளனர் - ஜனாதிபதி
7:21 PM, 14 Aug
இந்திய சதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கு அளப்பரியது - ஜனாதிபதி
7:21 PM, 14 Aug
இந்தியா ஒருபோதும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மறக்காது - ஜனாதிபதி
7:21 PM, 14 Aug
கல்வி, பொருளாதாரம் சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் நல்ல ஆட்சிக்கான சான்றாக உள்ளது - ஜனாதிபதி
7:21 PM, 14 Aug
மீண்டும் வரும் நமது பொருளாதாரம் அனைத்து மக்களுக்கு பேருதவியாக இருக்கும் - ஜனாதிபதி
7:21 PM, 14 Aug
கொரோனாவால் உலக நாடுகள் பலவும் பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இந்தியாக அதில் இருந்து வேகமாக மீட்டுள்ளது - ஜனாதிபதி
7:22 PM, 14 Aug
இந்தியாவின் சுதந்திர தின வீரர்களின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம் - ஜனாதிபதி
7:45 PM, 14 Aug
தேசிய கல்வி கொள்கையிலான கல்வி முறை நம்மை பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கும் - ஜனாதிபதி
7:45 PM, 14 Aug
தேசிய கல்வி கொள்கை எதிர்கால தலைமுறையை அடுத்தக்கட்ட தொழில் புரட்சிக்கு தயார்படுத்தும் - ஜனாதிபதி
7:45 PM, 14 Aug
அரசியலில் பெண்கள் சாதிப்பது என்பது ஆரோக்கியமானது - ஜனாதிபதி
7:45 PM, 14 Aug
பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர் - ஜனாதிபதி
7:45 PM, 14 Aug
இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்பட்டு வருகிறது - ஜனாதிபதி
7:46 PM, 14 Aug
நாட்டில் பாலின பாகுபாடு குறைந்து வருகிறது - ஜனாதிபதி
7:46 PM, 14 Aug
புதிய இந்தியாவின் நம்பிக்கையாக இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளனர் - ஜனாதிபதி
8:20 AM, 15 Aug
76ஆவது சுத்நதிர தினத்தையொட்டி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் பிரதமர்
8:21 AM, 15 Aug
டெல்லியில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
8:21 AM, 15 Aug
காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
8:21 AM, 15 Aug
டெல்லியில் 9ஆவது முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
8:21 AM, 15 Aug
முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் மோடி
Delhi | PM Modi inspects the inter-services and police Guard of Honour at Red Fort pic.twitter.com/IxySt0G0r4