8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹10 லட்சம் கார் முன்பணம், பண்டிகை முன்பணம்? புது விதி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், படிகள் மற்றும் பல்வேறு சலுகைகளை மறுஆய்வு செய்யும் 8வது மத்திய ஊதியக் குழு (8th Central Pay Commission) தற்போது பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின் (NC-JCM) பணியாளர் தரப்பு (Staff Side) மத்திய அரசு ஊழியர்களின் நலனை முன்னிறுத்தி விரிவான மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இந்த மனுவில் தற்போதுள்ள கணினி முன்பணம் மற்றும் வீடு கட்டும் முன்பணத்தின் வரம்பை உயர்த்துவதோடு, மூன்று புதிய முன்பணங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

8th Pay Commission

மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த பரிந்துரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போது பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவை ஊழியர்களின் நிதிச் சுமையை அதிகரித்துள்ள நிலையில், இந்த முன்பணங்கள் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு சக்கர வாகன முன்பணம் - ₹10 லட்சம் வரை வட்டியில்லா உதவி
இன்றைய காலகட்டத்தில் கார் ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, மாறாக குடும்பத்துடன் பாதுகாப்பாக பயணிக்கும் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது என்று NC-JCM பணியாளர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, மத்திய அரசு ஊழியர்கள் கார் வாங்குவதற்கு ₹10,00,000/- வரை நான்கு சக்கர வாகன முன்பணம் வழங்க 8வது ஊதியக் குழு பரிந்துரைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இந்த முழு தொகையும் முற்றிலும் வட்டியில்லாததாக (Interest-free) இருக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சலுகை அமலுக்கு வந்தால், ஊழியர்களின் போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையும்.

இயற்கை பேரிடர் முன்பணம் - மீண்டும் அறிமுகம்

இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான மழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றன. இத்தகைய சூழல்களில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க நிதி உதவி தேவைப்படுகிறது. முன்பு வழங்கப்பட்ட இந்த முன்பணம் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. அதை மீண்டும் அமல்படுத்தி, ஊழியர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்தை வட்டியில்லாமல் வழங்கவும், அதை 24 தவணைகளில் திரும்பப் பெறவும் 8வது ஊதியக் குழு பரிந்துரைக்க வேண்டும் என NC-JCM கோரியுள்ளது.

பண்டிகை முன்பணம் - குடும்ப கொண்டாட்டங்களுக்கு உதவி

பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்த நாட்டில் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கான செலவுகளை சமாளிக்க இந்த முன்பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். JCM நிலைக்குழு கூட்டத்தில் அரசு தரப்பு இதை பரிசீலிப்பதாக உறுதியளித்திருந்தாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, ஊழியர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகையை பண்டிகை முன்பணமாக வழங்கி, அதை 10 தவணைகளில் திரும்பப் பெற 8வது ஊதியக் குழு பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது 8வது ஊதியக் குழு பல்வேறு அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகளை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்த மனுக்களை விரிவாக ஆய்வு செய்து, குழு தொடங்கப்பட்ட 18 மாதங்களுக்குள் இறுதி பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேசிஎம்-ன் இந்த பரிந்துரைகள் அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் நிதிச் சுமை கணிசமாகக் குறையும். ஊழியர்கள் மத்தியில் இந்த முன்பணங்கள் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அரசு மற்றும் ஊழியர் அமைப்புகளுக்கு இடையிலான உரையாடல் வலுப்பெற்று, இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+