இந்திய குடியுரிமை வேண்டாம்.. வெளிநாட்டில் கொத்தாக செட்டில் ஆன மக்கள்! மொத்தம் இவ்வளவு பேரா!
டெல்லி: இந்தியக் குடியுரிமையைத் துறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமையை தேர்வு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவல்படி, இந்தியக் குடியுரிமையை துறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தரவுகளை வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். குடியுரிமைத் துறப்பு குறித்த ஆண்டுவாரியான பதிவுகளை அரசு தொடர்ந்து பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2011 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து வெளிநாட்டுக் குடியுரிமையை நாடியுள்ளனர். இந்த எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் உச்சத்தை எட்டியுள்ளது.
வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், குடியுரிமை துறந்தவர்களின் ஆண்டுவாரியான புள்ளிவிவரங்களை ராஜ்யசபாவில் சமர்ப்பித்தார். அதன்படி, 2011-ல் 1,22,819 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2020-ல் சற்று குறைந்து 85,256 ஆனது. எனினும், பின்னர் கணிசமாக உயர்ந்து, 2022-ல் அதிகபட்சமாக 2,25,620 ஆகவும், 2023-ல் 2,16,219 ஆகவும், 2024-ல் 2,06,378 ஆகவும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications