கண் திருஷ்டி.. பேஷன் ஷோ..தமிழக எம்பிக்கள் கறுப்பு உடையை கேலி செய்த பிரதமர் மோடி- வெடிக்கும் சர்ச்சை!
டெல்லி: மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டுப் புறக்கணித்ததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் சென்றதை கண் திருஷ்டி, பேஷன் ஷோ என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி கேலி செய்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்துப் பேசுகையில், இன்று விடைபெறும் உறுப்பினர்களுக்குப் பழைய மற்றும் புதிய கட்டிடத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும், அவர்கள் அமிர்த காலம் மற்றும் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் சாட்சியாக அங்கிருந்து திரும்புகிறார்கள் என்றார் பிரதமர் மோடி.

தமிழக எம்பிக்களின் கறுப்பு உடை குறித்து பேசிய பிரதமர் மோடி, நாடு செழிப்பின் புதிய உயரங்களை எட்டி வருவதாகவும், இந்தச் சம்பவம் நாட்டின் முன்னேற்றத்திற்கான பயணத்திற்குக் 'கறு ப்புப் பொட்டு' மூலம் கண் திருஷ்டியை விரட்டும் முயற்சியாகப் பார்க்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பண்டைய புனித நூல்களை மேற்கோள் காட்டிய பிரதமர், நல்ல சகவாசத்தை வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரியான குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்றும், கெட்ட சகவாசத்தால் சூழப்பட்டவர்கள் குறைபாடுடையவர்களாக ஆகிறார்கள் என்றும் பேசினார் பிரதமர் மோடி.
அத்துடன் ஒரு நதியின் நீர் ஓடும்போது மட்டுமே குடிக்கத் தகுதியானதாக இருக்கும், அது கடலில் கலக்கும்போது உப்பாக மாறும் என்று அவர் மேலும் கூறினார். இந்த நம்பிக்கையுடன், தமது உரையை நிறைவு செய்த பிரதமர், ஓய்வு பெறும் உறுப்பினர்களின் அனுபவம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றார் பிரதமர் மோடி.
இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தமது எக்ஸ் வலைதளப் பதிவில், ஓய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நேற்று நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் "மாநிலங்களவைக்குள் சில உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து வந்தபோது நாம் பேஷன் ஷோ அணிவகுப்பை பார்த்தோம்" என பேசியிருந்தார். "நாடும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. எது பேஷன் ஷோ” என்று என காட்டமாக எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications