ராம்தேவை ஓட ஓட விரட்டுறாங்க-அங்கிட்டு கைது செய்ய கோரிக்கை- இங்கிட்டு கிரிமினல் நடவடிக்கைக்கு வழக்கு
டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்த ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு மருந்து கிடைக்காமல் மனித உயிர்களை லட்சக்கணக்கில் பலி கொடுத்து வருகின்றன. கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
சீனாவின் கொரோனா வைரஸுக்கும் ஐரோப்பிய நாடுகளின் கொரோனா வைரஸுக்குமான மரபணு வேறுபாடு இருக்கிறது; இது கொரோனா மருந்து கண்டுபிடிப்பில் மிகப் பெரும் முட்டுக்கடையாக இருக்கிறது என்கிறது மருத்துவ உலகம்.

ராம்தேவின் கொரோனா மருந்து
இந்த நிலையில் திடீரென கொரோனாவை 15 நாட்களில் 100% குணப்படுத்தும் மருந்தை நாங்களே முதலில் கண்டுபிடித்துவிட்டோம்; ரூ545 தான்.. 30 நாட்களுக்கு சாப்பிடலாம்.. கொரோனாவே இல்லாமல் போய்விடும் என்று யோகா வகுப்பு நடத்தும் ராம்தேவ் அறிவித்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

விளம்பரம் செய்ய மத்திய அரசு தடை
ராம்தேவுக்கு மத்திய அரசுதான் முதலில் செக் வைத்தது. ராம்தேவ், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி அவர் தமது தயாரிப்பை விளம்பரம் செய்ய தடை விதித்தது மத்திய அரசு. மேலும் கொரோனாவுக்கான மருந்து என ராம்தேவ் கூறுவது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

காய்ச்சல் மருந்துதான்
அத்துடன் உத்தரகாண்ட் மாநில அரசு இன்னும் ஒருபடி மேலே சென்று ராம்தேவை அம்பலப்படுத்தியது. ராம்தேவின் தயாரிப்பு கொரோனாவுக்கான மருந்து என நாங்கள் லைசென்ஸ் கொடுக்கவே இல்லை. அது சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துதான் என உண்மையை பகிரங்கமாக போட்டுடைத்தது.

பீகார் கோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசும் ராம்தேவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி ராம்தேவ் ஏதேனும் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்பட்டிருக்கிறது. ராம்தேவின் இந்த அறிவிப்புக்கே அவரை கைது செய்திருக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் பீகாரில் ராம்தேவ் அண்ட் கோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஜூன் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications