ராம்தேவை ஓட ஓட விரட்டுறாங்க-அங்கிட்டு கைது செய்ய கோரிக்கை- இங்கிட்டு கிரிமினல் நடவடிக்கைக்கு வழக்கு
டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்த ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு மருந்து கிடைக்காமல் மனித உயிர்களை லட்சக்கணக்கில் பலி கொடுத்து வருகின்றன. கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
சீனாவின் கொரோனா வைரஸுக்கும் ஐரோப்பிய நாடுகளின் கொரோனா வைரஸுக்குமான மரபணு வேறுபாடு இருக்கிறது; இது கொரோனா மருந்து கண்டுபிடிப்பில் மிகப் பெரும் முட்டுக்கடையாக இருக்கிறது என்கிறது மருத்துவ உலகம்.

ராம்தேவின் கொரோனா மருந்து
இந்த நிலையில் திடீரென கொரோனாவை 15 நாட்களில் 100% குணப்படுத்தும் மருந்தை நாங்களே முதலில் கண்டுபிடித்துவிட்டோம்; ரூ545 தான்.. 30 நாட்களுக்கு சாப்பிடலாம்.. கொரோனாவே இல்லாமல் போய்விடும் என்று யோகா வகுப்பு நடத்தும் ராம்தேவ் அறிவித்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

விளம்பரம் செய்ய மத்திய அரசு தடை
ராம்தேவுக்கு மத்திய அரசுதான் முதலில் செக் வைத்தது. ராம்தேவ், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி அவர் தமது தயாரிப்பை விளம்பரம் செய்ய தடை விதித்தது மத்திய அரசு. மேலும் கொரோனாவுக்கான மருந்து என ராம்தேவ் கூறுவது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

காய்ச்சல் மருந்துதான்
அத்துடன் உத்தரகாண்ட் மாநில அரசு இன்னும் ஒருபடி மேலே சென்று ராம்தேவை அம்பலப்படுத்தியது. ராம்தேவின் தயாரிப்பு கொரோனாவுக்கான மருந்து என நாங்கள் லைசென்ஸ் கொடுக்கவே இல்லை. அது சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துதான் என உண்மையை பகிரங்கமாக போட்டுடைத்தது.

பீகார் கோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசும் ராம்தேவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி ராம்தேவ் ஏதேனும் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்பட்டிருக்கிறது. ராம்தேவின் இந்த அறிவிப்புக்கே அவரை கைது செய்திருக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் பீகாரில் ராம்தேவ் அண்ட் கோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஜூன் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications