நாடே ஆக்சிஜனுக்கு ஏங்கியுள்ளபோது.. ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கி.. ரூ.12,000க்கு விற்ற இரக்கமற்ற நபர்
டெல்லி: நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கி ரூ.12,500-க்கு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக கொடூரமாக உள்ளது.
தினமும் 3,00,000-க்கும் அதிகமான பாதிப்புகளையும், 2,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் நாடு சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு
மேலும் கொரோனா நோயாளிகளின் உயிர்காக்க உதவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நாட்டில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தினமும் ஏராளமான நோயாளிகள் உயிரை விடுகின்றனர். இதனால் விமானப்படை விமானம் மூலமும், ரயில் மூலமும் அவசர, அவசரமாக மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது.

ஏங்கி தவிக்கும் நோயாளிகள்
''போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் டெல்லியே சீரழிந்து விடும்'' என்று மாநில அரசு மத்திய அரசிடம் உருக்கமாக கேட்டுள்ளது. இப்படி தலைநகரில் ஒவ்வொரு உயிரும் ஆக்சிஜனுக்கு ஏங்கி தவித்து வரும் நிலையில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஒரு நபர் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனசாட்சி இல்லாத நபர்
டெல்லியின் தாஷ்ராத்புரி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார். இவர் தனது வீட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு 67 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட 32 பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
Recommended Video

அதிக விலைக்கு விற்பனை
அனில் குமார் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றை 12,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் அவரிடம் விற்பனை செய்வதற்கான அனுமதியோ அல்லது ஆவணங்களோ இல்லை என்பது தெரியவந்தது. அனில் குமாரை கைது செய்த போலீசார் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications