நாடே ஆக்சிஜனுக்கு ஏங்கியுள்ளபோது.. ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கி.. ரூ.12,000க்கு விற்ற இரக்கமற்ற நபர்
டெல்லி: நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கி ரூ.12,500-க்கு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக கொடூரமாக உள்ளது.
தினமும் 3,00,000-க்கும் அதிகமான பாதிப்புகளையும், 2,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் நாடு சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு
மேலும் கொரோனா நோயாளிகளின் உயிர்காக்க உதவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நாட்டில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தினமும் ஏராளமான நோயாளிகள் உயிரை விடுகின்றனர். இதனால் விமானப்படை விமானம் மூலமும், ரயில் மூலமும் அவசர, அவசரமாக மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது.

ஏங்கி தவிக்கும் நோயாளிகள்
''போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் டெல்லியே சீரழிந்து விடும்'' என்று மாநில அரசு மத்திய அரசிடம் உருக்கமாக கேட்டுள்ளது. இப்படி தலைநகரில் ஒவ்வொரு உயிரும் ஆக்சிஜனுக்கு ஏங்கி தவித்து வரும் நிலையில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஒரு நபர் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனசாட்சி இல்லாத நபர்
டெல்லியின் தாஷ்ராத்புரி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார். இவர் தனது வீட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு 67 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட 32 பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
Recommended Video

அதிக விலைக்கு விற்பனை
அனில் குமார் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றை 12,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் அவரிடம் விற்பனை செய்வதற்கான அனுமதியோ அல்லது ஆவணங்களோ இல்லை என்பது தெரியவந்தது. அனில் குமாரை கைது செய்த போலீசார் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications