Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவின் "ஒன்றிய அரசு" முழக்கத்துக்கு மாஸ் வெற்றி? மத்திய பாஜக அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு தொடர்பான அறிவிக்கைகள், கடிதங்களில் இனி "மத்திய அரசு" என்பதற்கு பதில் இந்திய அரசியல் சாசனத்தின் இடம்பெற்றுள்ள படி "ஒன்றிய அரசு" என பயன்படுத்த உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 2021-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து முதல்வராக 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' (மு.க.ஸ்டாலின்) பதவியேற்றார். அப்போது முதல் திமுக அரசும் தமிழ்நாடு அமைச்சர்களும் அறிக்கைகள், பேட்டிகள், கட்டுரைகளில் அரசு குறிப்புகளில் "மத்திய அரசு" என்பதற்கு பதில் "ஒன்றிய அரசு" என குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த எதிர்ப்பு அடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இப்போது மத்திய அரசு என்பதற்கு பதில் "ஒன்றிய அரசு" என்பதையே பயன்படுத்தி வருகின்றன.

A PIL seeks to replace Central Govt term with Union Govt

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த முதியவர் ஆத்மராம் சரோகி (வயது 84) டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், இந்திய அரசியல் சாசனத்தின் படி "இந்தியா" என்பது மாநிலங்களின் "ஒன்றியமாகும்". ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட "மத்திய அரசு" என்ற சொல்லையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இது இந்திய மாநிலங்களுக்கும் மத்தியில் உள்ள அரசுக்கும் இடையேயான உறவை சீர்குலைக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தகைய பிழையை தொடர்ந்தும் அனுமதிக்காமல் இனி அனைத்து ஆவணங்கள், அறிக்கைகள், கடிதத் தொடர்புகளில் "மத்திய அரசு" என்பதற்கு பதில் "ஒன்றிய அரசு" என்பதை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

A PIL seeks to replace Central Govt term with Union Govt

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சர்மா சந்திரா, நீதிபதி சஞ்சீவ் நரூலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வெள்ளிக்கிழமையன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இம்மனுவை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்; இது அர்த்தமற்ற பொதுநலன் மனு என சுட்டிக்காட்டினர்.

அப்போது நீதிபதிகள், "மத்திய அரசு" என்று பயன்படுத்த யாரும் தடை விதிக்கவில்லையே.. அப்படி இருக்கும் போது "ஒன்றிய அரசு" என ஏன் பயன்படுத்த வேண்டும் என மனுதாரரை நோக்கி கேள்வி எழுப்பினர்.

A PIL seeks to replace Central Govt term with Union Govt

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய அரசியல் சாசனத்தில் எந்த ஒரு இடத்திலும் "மத்திய அரசு" என்ற சொல்லே கிடையாது. அனைத்து இடங்களிலும் "ஒன்றிய அரசு" என்றுதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என வாதிட்டார். இதற்கும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+